பிறர் மனையை (மனைவியை) பார்க்காதே !! திருவள்ளுவர் தரும் சான்றிதழ்.!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம்:-பிறனில் விழையாமை .
குறள்எண் :- 149.
அனைவருக்கும் வணக்கம். இன்று
நான் உங்கள் சிந்தனைக்கு தரும்
குறளும் அதன் விளக்கமும்
என்னவென்றால்:-
நலக்குரியார் யாரெனின் நாம
நீர்வைப்பின்
பிறர்குரியாள் தோள் தோயாதார்.. ..
எவ்வளவு அர்த்தம் உள்ளடக்கிய
குறள் இது! மனிதன் இப்படித்தான்
வாழ வேண்டும் என்ற தத்துவத்தை
உணர்த்தும் குறள்
மேலேசொன்னது.
அதாவது இதன் விளக்கம்
என்னவென்றால் கடலால்
சூழப்பட்ட இந்த உலகத்தில் வாழும்
மனிதர்களுள் உண்மையில்
நல்லவர் யார் என்று கேட்டால்
அடுத்த நபருக்கு உரிய பெண்ணை
எவர் ஒருவர்
மெய்யாலும்மனதாலும்கையாலும்
அவளது தோள்களை தொடாமல்
இருக்கிறாரோ அவரே அகிலம்
புகழும் உத்தமர் என்று வள்ளுவர்
கூறியுள்ளபடி வாழ்ந்திடுவோம்!
மீண்டும் நாளை வேறொரு குறள்
விளக்கத்தில்
சந்திப்போமா நேயர்களே!
நன்றி!வணக்கம்!!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment