உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
தினம் ஒரு திருக்குறள்.
குறள் எண் :- 631.
அதிகாரம் :- இடுக்கண் அழியாமை.
இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்பது இல்... ... ...
விளக்கம்:-
துன்பம் வரும்போது அதற்காகக்
கலங்காமல் நகுதல் (சிரித்திட)
வேண்டும். அந்தத் துன்பத்தை
நெருங்கி எதிர்த்து வெல்லக்கூடிய
ஆயுதம் அதைப்போன்றது வேறு
எதுவும் இல்லை. இது வள்ளுவர்
தரும் குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம்:-
அது 1991ம் ஆண்டு மே மாதம் 21ம்
தேதி. தமிழ்நாடு சட்டமன்றத்திற்கும்
பாராளுமன்றத் தேர்தலுக்கும்
சேர்த்து இரண்டு கட்டங்களாகத்
தேர்தல் நடைபெற்றது. (மே மாதம்
2௦ம் தேதி முதல்கட்டமும் அதே மே
மாதம் 23ம் தேதி இரண்டாம்
கட்டமுமாக ) இரண்டாவது கட்டத்
தேர்தல் பிரச்சாரத்திற்காக மறைந்த
பாரதப் பிரதமர் அன்னை
இந்திராகாந்தியின் இளைய மகன்
ராஜீவ்காந்தி பல்லாயிரம்கோடிகள்
தன்னுடன் எடுத்துவருகிறார்
தமிழகத் தேர்தல் பிரச்சாரத்திற்கு.,
சென்னையை அடுத்துள்ள இடமாம்
ஸ்ரீபெரும்புதூர் என்ற இடத்திற்கு.
இங்கே வைத்து இவருடைய
கதையை முடிக்கப்போகின்றார்கள்
என்கின்ற தகவல் முன்கூட்டியே
தெரிந்துகொண்டவர்கள் தமிழக
அரசியல் வானில் வலம் வரும்
நால்வர். அவர்கள் யார் ? யார் ?அந்த
நால்வரில் மூன்று பேர் ஆண்கள்.
இவர்களுள் இரண்டு பேர்கள் அந்தக்
காங்கிரஸ் கட்சியின் தலைமைப்
பொறுப்பில் இருப்பவர்கள். ஒருவர்
பெயரில் கருமை நிறத்தைக்
கொண்ட மூத்தவர். இன்னொருவர்
இவரும் நிறம் கருப்பு. பெயரோ
வாழைஇலையின் பெயரில் பாதியும்
பாடிவரும் குயிலில் பெயர்தனில்
பாதிப்பெயரும் உடையவர்கள்
ஆவார்கள்.
மீதி உள்ள ஒருவர் பேயின் உருவில்
உள்ள ஒரு ஆண் இனத்திற்கு
மாற்றானவர். அந்த பிரகஸ்பதியை
பெண் என்று அழைப்பதற்கு என
பேனா முனைகூட எழுதிட
மறுக்கின்றது. அவருக்கு இந்த
ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட
தினத்திற்கு முந்தியநாள் இரவு
தர்மபுரியில் தேர்தல்
பிரச்சாரத்திற்குச் சென்றிருந்த அவர்
மறுநாள் ஸ்ரீபெரும்புதூரில்
நடைபெற உள்ள இந்த தேர்தல்
நிதியளிப்புக் கூட்டத்தில்
ராஜீவ்காந்தியுடன் கலந்துகொண்டு
அந்த மேடையில் உரைநிகழ்த்தும்
ஏற்பாடு இருந்தது. ஆனால் இந்த
ஸ்ரீபெரும்புதூரில் வைத்து கதையை
முடிக்க இருக்கும் தகவல் இவருக்கு
முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு
விட்ட காரணத்தினால், அந்தக்
கூட்டத்திற்கு செல்லாமல் இவர்
தர்மபுரியிலேயே தங்கிவிட்ட கதை
நாடறியும்.நல்லவர்கள்அறிவார்கள்.
ராஜீவ் தன்னுடன் கொண்டுவந்தபல
ஆயிரம் கோடிகள் பணத்தைத்
தின்று ஏப்பம் விட்டவர்கள் யார்
என்பதை இந்த நாடு அறியும். அந்த
நல்லவர்கள் வாழ்க.
எந்த ஒரு விசைக்கும் அதே அளவு
சக்தி உள்ள எதிர் விசை உண்டு.
இதுதான் நியூட்டன் விதியாகும்.
கிட்டத்தட்ட ராஜீவ்காந்தியின்
கதையையும் நாம் இதற்கு
ஒப்பாகவே சொல்லிடலாம். எப்படி
என்றால் இவரது தாயார் அன்னை
இந்திராகாந்தி வன்முறை
வெறித்தாக்குதலுக்கு ஆளாகி
மரணத்தைத் தழுவினார். அப்போது
விமான ஓட்டியாகப் பணி புரிந்த
இவர் விபத்து போலவே இந்த
நாட்டின் பிரதம மந்திரியாக
ஆக்கப்பட்டார். நியுட்டனின்
தத்துவம் இங்கே விளையாடுது
அன்பர்களே. தாயார்
வன்முறைவெறித்தாக்குதலுக்கு
ஆளானதினால் பிரதமர் பதவியின்
மீது ஒட்டிக்கொண்ட இவரும் அதே
வன்முறைவெறிக்கு ஆளாகி
மரணத்தைத் தழுவினார் என்பது
இந்தியத் திருநாட்டின் வரலாறு.
இந்தத் தேர்தலில் ராஜீவ்காந்தியின்
மரணத்தால் அனுதாப அலையைத்
தங்கள் வசம் தக்கவைத்துக்
கொண்டதினால் MGR கட்சி அமோக
வெற்றி பெற்று ஆட்சியைப்
பிடித்தது. அப்போதும் கலைஞர்
இந்தத் துன்பத்தை தனது
இளநகையால் (புன்னகையால்)
வென்றார். 1991-1996 ஐந்து
ஆண்டுகளும் தலைவர் கலைஞர்
அவர்கள் புன்னகையினால் அந்த
துன்பத்தை வென்றார்.1996 பொதுத்
தேர்தலில் வெற்றியும் பெற்றார்.
ஆட்சியைப் பிடித்தார்.
எந்தவிதமான பழிவாங்கும்
நடவடிக்கையையும் இவர்
மேற்கொள்ளவில்லை. தமிழகம்
சுகமானதொரு ஐந்துஆண்டுகால
ஆட்சியை கடந்தது.மீண்டும் 2௦௦1
பொதுத் தேர்தல் வந்தது. கலைஞர்
தோல்வியைத் தழுவினார்.
கலங்கிட வில்லை. புன்னகை
புரிந்தார். இவரைத் தழுவிட வந்த
துன்பம்தான் உடைந்து சிதறித் தூள்
தூள் ஆனது. 2௦௦1-2௦௦6 ஐந்து ஆண்டு
காலம் முடிவுற்றது. 2௦௦6ம் ஆண்டு
நடைபெற்ற பொதுத் தேர்தலில்
மீண்டும் கலைஞர் எழுச்சியுடன்
வெற்றி பெற்றார். சிறந்த முறையில்
ஆட்சி செம்மையாகவும் சீராகவும்
நடந்தேறியது. 2௦11ம் ஆண்டுபொதுத்
தேர்தல் வந்தது. மீண்டும் கலைஞர்
தோல்வி பெற்றார். இப்போதும்
தலைவர் இந்தத் துன்பத்தைக்கண்டு
கலங்கிடவே இல்லை. சிரித்தார்.
புனகைத்தார். துன்பம்தான் துன்பம்
அடைந்தது. மீண்டும் 2௦16 ஓஅல்லது
அதற்கு முன்பாகவோ தமிழ்நாடு
சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும்
அப்ப்போதும் தலைவர் இதே
புன்னகை தவழ்ந்திடும்
முகப்பொலிவுடன் முதல்வராக
ஆவார் இது காலத்தின் கட்டாயம்.
தமிழ் அன்னையின் விருப்பம்
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
அத்தனை தமிழர்களின் எண்ணமும்
அஃதே. மீண்டும் எமது அடுத்த குறள்
விளக்கத்தில் நாம் அனைவரும்
சந்தித்து மகிழ்வோம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment