Thursday, May 15, 2014

பணத்தின் பெருமையைப் பற்றி வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  பொருள் செயல்வகை.



குறள் எண் :-  751.



பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்


பொருளல்லது இல்லை பொருள்... ... ...



விளக்கம் :-    சமூகத்தில் ஒரு பொருளாக 


மதிக்கத் தகாதவரையும் ஒரு பொருளாக 


மதிக்கச் செய்யும் பொருள், இந்தபொருளைத் 


தவிர சிறந்த பொருள் இவ்வுலகத்தில் எதுவும் 


இல்லை.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


சோணைச்சாமி:-  எண்டா கருப்புச்சாமி..ஆமா 


நம்ம சிங்காரம் செட்டி இருக்கானே  அவன் 


சிங்கப்பூர் போயிருந்தானே வந்துட்டானா.


கருப்புச்சாமி :-  ஆமா.. நான் தெரியாமத்தான் 


கேக்கிறேன். செட்டியாரை நேரிலே பாக்குற 


போது, ஐயாங்குறே, முதலாளிங்குறே, இப்ப


என்னடான்னா, அவன்,இவன் அப்டீன்னு ஏக 


வசனத்துலேபேசுறே.என்னாகாலங்கத்தாலேயே 


டாஸ்மாக் போயிட்டு வந்துட்டியா அண்ணே.


சோணை:-  அட போடா முட்டாப்பயலே. எவன்


கிட்டே பணம் இருக்கு அங்கே போயி 


ஊத்துறதுக்கு. அந்த செட்டிப்பயலுக்கு 


நான் மருவதை தர்றது எல்லாம் எதுக்குன்னு 


உனக்குத் தெரியாதுலே. அதான் இப்படி பேசுறே. 


எல்லாம்பணம்டா..பணம்..அந்தப் பணம்தாண்டா 


இம்புட்டு மதிப்பும் மருவாதியும் ஒரு 



மனுசனுக்குத் தருது. தெரிஞ்சுக்கலே. 



கருப்பு:-  ஆமாஅண்ணேஇப்பதெரிஞ்சுக்கிட்டேன்.


ஒண்ணுக்கும் உதவாத பயலையும், மதித்துஇந்த 


சமுதாயம் மருவாதை தருதுன்னு சொன்னா அது


இந்த பணம் ஒண்ணுக்குத்தான் அப்படீன்னு 


இன்னைக்கு தினம் ஒரு திருக்குறள் பதிவுலே 


வள்ளுவர் சொல்லி இருக்கார்னு நம்ம மதுரை 


T.R. பாலு சார் எழுதி இருக்கிறதை படிச்சுட்டு 


வந்தேன் அண்ணே. சரி எனக்கு நேரம் ஆச்சு. 


போயிட்டு வாரேன்.



நன்றி !! வணக்கம் !!

******************************************************


அன்பர்களே !!


நமது தினம் ஒரு திருக்குறள் பதிவிலே இன்று 


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகிறது.


மீண்டும் அடுத்த பதிவினில் சந்திப்போம்.

No comments:

Post a Comment