Friday, May 16, 2014

பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர் செய்த செயல்களே காரணம் !! வள்ளுவர் கூறிய கருத்து !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  தெரிந்து தெளிதல்.


குறள் எண் :-  5௦5.



பெருமைக்க்சும் எனைச் சிறுமைக்கும் தத்தம் 

கருமமே கட்டளைக் கல்... ... ... 



விளக்கம்  :-   ஒரு மனிதனது பெருமைக்கும் 


சிறுமைக்கும் உரை கல்லாகஇருப்பதுஅவனவன் 


செய்துவந்த காரியங்களே ஆகும். இதுவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் 


திரு மு. கருணாநிதி அவர்களின் 


இன்றைய நிலைமைக்கு அவர் கடந்த 


காலங்களில் செய்த தவறான காரியங்களே 


காரணங்களே ஆகும்.  திரு மு.க.அழகிரி 


அவர்களுக்கு, அவரின் தகுதிக்கு சிறிதும் 


ஒவ்வாத பதவியான தென்மண்டல அமைப்புச் 


செயலாளர் என்ற புதிதாக பதவி ஒன்றினை 


உருவாக்கி வைத்து, அதனை அன்னாருக்குத் 


தாரை வார்த்தது. அவரைப்பற்றி வந்த அனைத்து 


குற்றச் சாட்டுக்களையும் ஒன்றினைக்கூட 


விசாரிக்காமல் புறம் தள்ளியது. தனது 


சொல்லை தளபதியார் ஏற்காமல் தானே 


செயல் பட்டது, தேவை இல்லாமல் திருமதி 


கனிமொழி அவர்களை அரசியலில் 


ஈடுபடுத்தியது, இதுபோல இன்னும் 


பலபல விஷயங்கள், எழுதிட ஏடு போதாது. 


இவைகள்தான் இன்றையதினம் தி.மு.க. 


வரலாறு காணாத தோல்வியைச் 


சந்தித்ததற்கான மூல காரணங்கள் ஆகும். 


விதை விதைத்தவன் தானே விளைந்த பயிரை 


அறுக்க வேண்டும். 


வினை விதைத்தவன் தானே வினையை 


அனுபவிக்கவேண்டும்.



கண்ணை மறைத்து என்ன விதை போட்டாலும் 


போட்ட விதை என்ன வென்று மரம் வளர்ந்து 


காட்டாதோ ?


கண்ணை மறைத்து என்ன காரியத்தைச் 


செய்தாலும் காலக்கணக்களவன் காட்டி வைக்க 


மாட்டானோ ?


நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment