Wednesday, May 21, 2014

நாட்டின் இரக்கமற்ற அரசனின் ஆட்சியில் குடிமக்களின் நிலைமை இதுதான் !! வள்ளுவர் தரும் விளக்கம் !!









தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  கொடுங்கோன்மை.


குறள் எண் :-  557.



துளியின்மை ஞாலத்திற்கு ஏற்றற்றே வேந்தன் 


அளியின்மை வாழும் உயிர்க்கு... ... ... 



விளக்கம் :-   வான்மழை இல்லையெனில் 


உயிர்கள் அடையும் துன்பம் எவ்வளவோ, 


அவ்வளவு துன்பத்தைநெஞ்சினில் 


சிறிதும் இரக்கம் அற்ற அரசனது நாட்டினில் 


உள்ள மக்கள் அடைவார்கள். இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :- 


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


வள்ளுவப் பெருந்தகைக்கு, தெய்வப்புலவர் 


என்று ஒரு பெயர் உண்டு. 


ஏன்,எதற்காக, இந்தப்பட்டம் அவருக்கு 


வழங்கப்பட்டது என்று நான் பலமுறை 


எனக்குள்ளாகவேயோசித்துப் பார்த்தது உண்டு. 


மேற்சொன்ன குறளைப்படித்து அதன் 


அர்த்தத்தைபுரிந்துகொண்டபின்புதான் அவருக்கு 


வழங்கப்பட்ட அந்த பட்டம் உண்மையிலேயே 


ஏற்புடையது என்று நான் அறிந்து கொண்டேன். 


எப்படி என்றால், இன்றைக்கு ஈராயிரம் 


ஆண்டுகட்கு முன்பாகவே நமது வந்தாரை 


வாழவைக்கும் தாயகத்தில் இப்படி ஒரு 


அரசாங்கம் ஏற்படும், பணத்தால் அனைத்து 


சமூகத்தினரின் வாயை அடைத்துவிடமுடியும் 


என்று ஆணவமும்,திமிரும்,கொழுப்பும், 


பெரியவர்களை எதிர்த்து, உதாசீனப்படுத்தி, 


மதிக்காமல், அவர்களை நக்கலும், கிண்டலும், 


நையாண்டியும் செய்து, தன்னிடம், பணபலம்,


படைபலம், காவல்துறையின் மேலான 


ஒத்துழைப்பு, தலையாட்டி பிழைப்பு நடத்தும் 


அரசு அலுவலர்களும், ஊழியர்களும், அடிமை 


மந்திரிகளும், பணத்தை வாயில் ஓட்டினால், 


ஊமைகளாகவே மாறிவிடும் பொதுஜனம் 


என்று இராஜாங்க சேவை செய்திடும் ஒரு 


அரக்கியின் கொடையின் கீழ் ஆளப்படும் இந்த 


நாடு என்பதை முன் கூட்டியே அறிந்து 


செயல்பட்டு அதற்காக, ஒரு குறளும் 


எழுதிவைத்துவிட்டுச் சென்றுள்ளாறே, 


இந்தப்பெருமை ஒன்று போதுமே அவருக்கு 


"  தெய்வப்  புலவர் " என்னும்  பட்டம் 


கொடுத்ததற்கு.  


நன்றி !! வணக்கம் !!


அன்புடன், 


இந்த நாட்டின் பாவப்பட்ட பொதுஜனங்கள்.


No comments:

Post a Comment