நல்ல பண்பு இல்லாத மனைவியை உடைய கணவனின் நிலைமை எப்படி இருக்கும் ?--திருவள்ளுவர் தரும் உண்மை நிலைமை !!
தினம் ஒரு திருக்குறள் !!
அதிகாரம் :- வாழ்க்கைத் துணைநலம்.
குறள் எண் :- 59.
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை
இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை ... ... ... ... ... ...
விளக்கம் :- புகழைக் காக்க விரும்பும்
(கற்புநெறி காத்து நடந்து ஒருவனுக்கு ஒருத்தி
என்னும் நிலையை ஏற்று செயல்படநினைத்தல்)
மனைவி இல்லாத கணவருக்கு, தன்னை
இகழ்ந்து பேசிடும் பகைவர்கள் முன்
காளைபோல நடக்கும் பெருமித நடை என்பது
இல்லை.இது திருவள்ளுவர் நமக்கு அருளிச்
சென்ற காலத்தால் அழியாத குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
வெள்ளையம்மாள் :- ஏண்டி !! செல்லத்தாயி.
ஆத்துக்கு ஒண்ணு மண்ணாத்தானே வந்தோம்.
ஒண்ணா சேந்தேபோவோம்.
ஆமா !! உனக்கு சேதி தெரியுமா செல்லத்தாயி ?
செல்லத்தாயி :- என்ன வெள்ளையம்மாக்கா ?
நீ சொன்னாத்தானே தெரியும். விவரத்தைச்
சொல்லுக்கா !!
வெள்ளை:- நம்ம மங்களம் இருக்காளே
மங்களம், அதாண்டி அஹ்ரஹாரத்துக்கு புதுசா
வாக்கப்பட்டு வந்திருக்காளே, அதாண்டி நம்ம
கோயில் மணி அய்யரோடமகன்புருஷோத்தமன்
பொண்டாட்டி அவளைப்பத்தி கிசுகிசு தெரியுமா ?
உனக்கு எங்கடிதெரியப்போவுது. நீதான் வீட்டை
விட்டு வெளிய வர்றதே இல்லையே.
அடியேய் !! அவ வேலை பாக்குற ஆபீசுலே
மானேசர் மகாதேவன் அவளை..அவளை...
செல்லத்தாயி:- அட.. வெக்கத்தை விட்டு
வெளிப்படையா சொல்லு வெள்ளையம்மாக்கா.
வெள்ளை :- அட.. இவ ஒருத்தி. எனக்கு ஏண்டி
வெக்கம். வேலையை பண்ணுறவளே நல்ல
சிலைமாதிரி வெளியே வலம்வர்றா.அவவேலை
பாக்குற கம்பெனி மானேசர் மகாதேவன்
மங்களத்தை "வச்சிருக்கானாம்டி ".ஹி..ஹி..ஹி..
செல்லத்தாயி:- வச்சிருக்கானா !! அப்படீன்னா ?
வெள்ளை :- அட போடி கூறுகெட்டகுப்பாயி.அந்த
மகாதேவன் மங்களத்தை சின்ன வீடாகவே
வச்சிருக்காண்டி.
செல்லத்தாயி:- இது என்னக்கா கொடுமை.
வெள்ளை :- அடியேய். கொடுமையே
இனிமேத்தான்டி இருக்கு. மங்களம்
மகாதேவனை மட்டும் இல்லடி ஆபீசுலே பியூன்
பரமசிவசித்துலே இருந்து டெஸ்பாச்
கிளார்க் டேனியல்ல ஆரம்பிச்சு காஷியர்
கனகசுப்பு வரைக்கும் எல்லோரோடயும்
அவளுக்குத் கள்ளத்தொடர்பு இருக்காம்டி.
ஒவ்வொருத்தரோட அவ இருக்கா பாரு
மங்களம்,வாராவாரம்சனிக்கிழமைஇங்கேருந்து
மகாபலிபுரம் போயி நல்லா குடிச்சு கும்மாளம்
போட்டு முடிச்சுட்டு ஞாற்றுக்கிழமை
ராவுக்குத்தான் வீட்டுக்குத் திரும்புறாளாம்னா
பாத்துக்க. இந்த விஷயம் கேள்விப்பட்டு
அவ புருசன் புருஷோத்தமன் முந்தா நேத்து
விசத்தைக் குடிச்சு ஆஸ்பத்ரியிலே சேத்து
நேத்துத்தான் வீட்டுக்குக் கூட்டியாந்துருக்காங்க.
ஆனா மங்களம் இத்த பத்தி எல்லாம்கவலையே
படலையாம். சிவத்த, அழகான
பொண்டாட்டிதான் வேணும்னு வானத்துக்கும்
பூமிக்கும் குதிச்சானே புருஷோத்தமன், அவனை
ஆண்டவன் நல்லா பழி வாங்கிட்டார்டி.
செல்லத்தாயி:- யக்கா அவன்..அவன்தான்.
புருஷோத்தமன் இங்க வரான்க்கா.
வெள்ளை :- வரட்டும் உம்.. தொட்டுத்தாலி
கட்டுன பொண்டாட்டியை உருப்படியா
கட்டுக்கோப்பா வச்சுக் காப்பாத்த முடியாத
பொண்டுகனுக்கு எல்லாம் எதுக்குடி
செல்லத்தாயி வெள்ளை வேட்டியும் சட்டையும் ?
உம்.. அம்புட்டையும் அவுத்துபோட்டுட்டு
அம்மணக் குண்டியா புளிய மரத்துலே தொங்க
வேண்டியதுதானே. வீதியிலே என்ன
வெக்கங்கங்கெட்டவனுக்கு எல்லாம்
நடை வேண்டிகிடக்கு ?
அட..என்ன நான் சொல்றது சரிதானே
செல்லத்தாயி !!
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
பார்த்தீர்களா !! புருஷோத்தமன் படும்பாடு.இவன்
கருப்பு.இவன் எதற்கு சிவப்பான
பொண்டாட்டிக்கு ஆசைப்பட்டான்?
தனக்கு இளையது தாரம் அப்படீன்னு நம்ம
முன்னோர்கள் அர்த்தம் இல்லாமலா
சொல்லியிருக்காங்க ?
இளையதுன்னு சொன்னா, வயசுலே மட்டும்
இல்ல, அழகுலே,நிறத்துலே,படிப்புலே,
அந்தஸ்த்துலே, ஆஸ்தியிலே, இப்படி
எல்லாத்துலேயும் ஆத்துக்காரியா வாரவஒருபடி
கம்மியா இருந்தாத்தான் அவ பொண்டாட்டியா
இருப்பா. இல்லாங்காட்டி கதை கந்தல்தான்
அப்டீங்கிரதை நம்ம திருவள்ளுவர்
இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாலேயே
எப்படி அழகாச் சொல்லியிருக்கார் பார்த்தீர்களா
நேயர்களே. அதாலே நான்என்னசொல்றேன்னா,
மனைவியைத் தேடுகிற இளைஞர்களே !!
உங்களுக்கு இளையதா தேடுங்கன்னு
கேட்டுக்கிட்டு கட்டுரையை, நமது நாட்டு நடப்பு
விளக்கத்தை நான் இத்தோட நிறைவு
செய்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment