அறிவுள்ளவர்களிடம் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நட்பு எப்படிப்பட்டது ? அறிவற்றவர்களிடம் கூடும் நட்பு எப்படிப் பட்டது ?வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- நட்பு.
குறள் எண் :- 782.
நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு... ... ... ... ...
விளக்கம் :- அறிவுடையாரோடு நாம் கொள்ளும்
நட்பு, பிறை நிறைந்துவருதல் போன்ற தன்மை
உடையது.அறிவில்லாதவரோடு கொள்ளும்
நட்பு,முழுமதி தேய்ந்துபின் செல்லுதலைப்
போன்ற தன்மை உடையதாகும்.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்
சென்ற குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
No comments:
Post a Comment