Wednesday, November 12, 2014

பெரியவர்களை மதிக்காமல் நடந்தால் எவ்வகைத் துன்பங்கள் நமக்கு நேர்ந்திடும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  பெரியாரைப் பிழையாமை.


குறள் எண் :-  892.


பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால் 

பேரா இடும்பைத் தரும்... ... ...


விளக்கம் :-  வயதில் அனுபவத்தில் மூத்த


பெரியவர்களை மதிக்காமல் அவர்களைத்


தூக்கி எறிந்து நடந்தால், அப்பெரியவர்களால்   


நமக்கு நீங்கிடாத துன்பம் வந்துசேரும். இது 


வள்ளுவர் நமக்கு அளித்த குறளும் அதன் 


விளக்கமும் ஆகும். எனவே நாம் இனிமேலாவது 


பெரியவர்களை மதித்து நடந்திடுவோம்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


பொன்னுச்சாமி :- ஏண்டா, தம்பி கண்ணுச்சாமி 


எங்கேடா உன்னை ரெண்டு நாளா ஆளையே 


காணோம். எங்கே போய்த் தொலைஞ்சே ?


கண்ணுச்சாமி :-  இல்லை அண்ணே நம்ம 


அம்மா...இல்ல..அம்மா..


பொன்னு:- என்னடா ஆச்சு உங்க அம்மாவுக்கு ?


கண்ணு:- அம்மான்னா என்னைப் பெத்த 


அம்மா இல்லண்ணே 


பொன்னு:- அப்பா உன்ன வளத்த அம்மான்னு 


சொல்லு. அப்படித்தானே.


கண்ணு :- அண்ணே போங்கண்ணே காமெடி


கீமெடி பண்ணாதீங்க. நம்ம முன்னாள் 


முதல்வர் அந்த அம்மாவைச் சொன்னேன்.


பொன்னு:- ஏண்டா உனக்கு வெக்கமா இல்லை.


உம்..உன்னைய பத்து மாசம் இடுப்பிலேயே 


சுமந்து உன்னையபெத்து, வளர்த்து,ஆளாக்கி,


சீராட்டி, பாலூட்டி ஒரு மனுசனா இந்த 


நாட்டுக்கு அர்ப்பணித்த ஒரு அன்புத் 


தெய்வத்தை யாரோ ஒரு முன்னாள் சினிமா 


நடிகைக்கு இணை வைச்சு அம்மான்னு 


கூப்பிடுறாயே.உன்னைய அந்தத் தெய்வம் 


நிச்சயமா மதிக்கவே மதிக்காதுடா. உனக்கு 


நிச்சயம் நரகம்தான் கிடைக்கும்.


உம்..சொல்லு..சொல்லு..அவங்களுக்கு என்ன ?


கண்ணு :- இல்ல அண்ணே அவங்க தண்டனைய


நீக்கி அவங்களை நிரபராதின்னு அறிவிக்கணும்


அப்படின்னு சாலை மறியல் போராட்டத்துக்குப் 


போயிருந்தேன். அதான் ரெண்டுநாளா வரலை 


இந்தப் பக்கம்.


பொன்னு:-  ஏண்டா நிரபராதின்னு நிரூபிக்க நீ 


எதுக்குடா சாலையைப் போயி மறிச்சு எல்லோர் 


மாதிரியும் போராட்டம் பண்றே. நேரே 


நீதிமன்றத்துக்கு இல்லை போயிருக்கனும். 


போடா மடப்பயலே.டேய் தம்பி அந்தபொம்பளை 


முந்தி நம்ம தல கலைஞருக்கு செஞ்ச 


கொடுமைக்குத்தான் இப்ப தண்டனைய 


அனுபவிக்க ஜெயிலுக்கு போயிருக்கு 


அப்படின்னுதான் எல்லோரும் பேசிக்குறாங்க.


இதுதெரியாம எண்டா ஆட்டு மனதைக் கூட்டம் 


மாதிரி இப்படி அலையுரே. தம்பி நாம 


நம்மளோட வாழ்க்கையிலே பெரியவங்களை, 


அனுபவம் மிக்க ஆன்றோர்களை, மிகச்சிறந்த 


பழுத்த அரசியல் வாதிகளை 


மதிக்கனும்டா.அவங்க கால்ல விழுந்து 


கும்பிட்டு வணங்கினா உனக்கு சொல்றேன் 


நிச்சயம் நாம் வாழ்க்கையில் 


உயரத்துக்குப்போகலாம். இப்பவும் ஒன்னும் 


கெட்டுப்போகலே. அந்த பொம்பள கொஞ்சம் 


விட்டுக்கொடுத்து, கௌரவம் பார்க்காம, தல 


கிட்டே போயி என்னைய மன்னிச்சுருங்க. நான் 


உங்களுக்கு எவ்வளவோ கெடுதல் 


பண்ணியிருக்கேன். நீங்கதான் இனிமே 


என்னையக் காப்பாத்தணும் அப்படீன்னு ஒரு 


வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை சொன்னா 


போதும்டா.நம்ம  தலைவர் நிச்சயம் மன்னிச்சி 


அந்த பொம்பளைய காப்பாத்துறதுக்கு தன்னால 


ஆன எல்லா உதவியும் செய்வாருடா. அதாலே 


நான் என்னசொல்றேன்னா நீயாவது 


பெரியவங்களை மதிக்காம துச்சமா தூக்கி 


எறிந்து பேசாம் மதிச்சு நடந்துக்கோ. உனக்குப் 


புண்ணியம் கிடைக்கும். அப்படி 


இல்லன்னுசொன்னா  உனக்கு அந்தப் 


பெரியவங்களாலே பெரும் துன்பங்கள் மட்டுமே 


உனக்கு வந்து சேரும். அம்புட்டுத்தான் நான் 


இப்ப சொல்றேன். கேட்டா கேட்டுக்க. 


இல்லாங்காட்டி வுட்டுருடா நான் வாறன்.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை. இரா. பாலு.


( மதுரை TR பாலு.

No comments:

Post a Comment