பண்பற்றவர்களின் நட்பு ஒருவருக்கு எத்தகைய பலனைத்தரும் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- தீ நட்பு.
குறள் எண் :- 810.
பழகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகவிர் குன்றும் இனிது ... ... ... ... ... ... ... ...
விளக்கம் :- பழகுவார் போன்ற ஆர்வத்தைக்
கொண்டிருந்தாலும், பன்பற்றவர்களிடம் நாம்
கொள்ளும் நட்பானது, வளர்வதை விடவும் நாம்
அழிவதே இனிமையானது. இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
வீரப்பா :- என்னடா தம்பி பாலப்பா, நம்ம அக்கா
விஜயலட்சுமியை இரண்டு மாசத்துக்கும் மேலா
காணவே காணோம். எங்க போச்சு அக்கா ? உம்..
ஒன்னும் புரியலையே.
பாலப்பா :- அண்ணே உங்களுக்கு விசயமே
தெரியாது போல இருக்கு. நீங்க என்ன
செய்தித்தாளேபடிக்கிறது இல்லையா அண்ணே?
அக்கா விஜயலட்சுமி தனது உண்மையான
உண்மை வருமானத்தை மறைத்து, உண்மை
வருமானத்துக்கு அதிகமா சொத்து சேர்த்த
வழக்கில், மங்களூரு சிறப்பு நீதி மன்ற நீதிபதி
சைக்கோ சி.பன்கா அவர்களால் தகுந்த
ஆதாரங்களால் நாலு வருஷம் சிறைத்
தண்டனையும் 200 கோடி அமெரிக்க டாலர்
அபராதத்தொகையும் இந்த அபராதத்
தொகையைக் கட்டத்தவறினால், மேலும்
ஓராண்டு சிறைத்தண்டனையும் என்ற தீர்ப்பின்
அடிப்படையில் 21 நாள் சிறைவாசம் அனுபவிச்சு
அதன் பிறகு, உயர்நீதி மன்றம் போயி, அங்கே
ஜாமீன் தள்ளுபடி ஆகி, அதுக்கப்புறம், உச்ச நீதி
மன்றம் போயி அங்கன ஜாமீன் வாங்கிட்டு வந்து
இப்ப தோட்டத்திலே படுகடுப்பாக ஓய்வு
எடுத்துக்கிட்டு இருக்காக எனும் செய்தி
உங்களுக்குத் தெரியாதா ?
வீரப்பா :- தெரியாதுடா தம்பி. தெரிஞ்சா உன்ட்ட
நான் இதைப்பத்தி கேப்பேனா. எல்லாத்துக்கும்
காரணம் அவங்க உயிர்த்தோழி புஷ்கலாதான்.
பெரியவங்க, அக்காவுக்கு வேண்டியவங்கஎன்று
எத்தனையோ பேர் படிச்சுப் படிச்சு சொல்லியும்
கேக்காம அந்த புஷ்கலாவோட வச்சுக்கிட்டு
இருந்த நட்பு எங்க கொண்டு போயி நம்ம
அக்காவை தள்ளியிருக்கு பாத்தியாடா தம்பி !!
பாலப்பா :- ஆம் ரொம்ப கரீட்டா சொன்ன
அண்ணே. நம்ம திருவள்ளுவர்கூட
அதையேதானே சொல்லியிருக்காரு, நம்ம
மதுரை TR பாலு ஐயா மேலே குறிப்பிட்டு
இருக்குற திருக்குறள் மூலமா. கேக்கலையே
நம்ம அன்பிற்கும் பாசத்திற்கும் நேசத்திற்கும்
உரிய அன்பு அக்கா ஜெயலக்ஷ்மி. கேட்டிருந்தா
இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா. இப்பப்
பாரு சட்டமன்ற உறுப்பினர் பதவியும் போயி,
முதலமைச்சர் அப்படீங்கிற அந்தஸ்தும் போயி
சாதாரண ஆளா உக்காந்திருக்காங்க. எல்லாம்
செய்த பாவமும், வினையும்தான் காரணம்.
ஆண்டவன் விருப்பப்படிதான் இங்கே எல்லாம்
நடக்குது அப்ப்படீங்கிறதுக்கு இத்த விடவும்
வேற எதுனாச்சும் உதாரணம் வேணுமா என்ன ?
இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு
பெறுகிறது அன்பர்களே !! மீண்டும் அடுத்த
பதிவினில் நாம் அனைவரும் சந்திப்போம்.
அதன்பிறகு சிந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் திருமலை. இரா. பாலு.
( மதுரை T.R. பாலு )
No comments:
Post a Comment