Tuesday, November 18, 2014

சொல்வது என்பது எல்லோருக்கும் எளிதான ஒன்று !! அவ்வாறு செய்வது என்பது மிகவும் அரிதானது !! வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  வினைத்திட்பம்.


குறள் எண் :-  664.


சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் 


சொல்லிய வண்ணம் செயல்... ... ... 



விளக்கம் :-  இந்த விஷயத்தை நான் இவ்வாறு 


செய்து முடித்திடுவேன் என்று வாயால் 


சொல்வது என்பது எல்லோருக்கும் எளிதான 


செயல் ஆனால் அப்படி சொல்லியபடி அந்தச் 


செயலை செய்து முடிப்பது என்பது மிகவும் 


அரிதான ஒன்று.  இது திருவள்ளுவர் நமக்கு 


அருளிச்சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



பூங்காவனம் :-  ஏண்டா தம்பி புஷ்பவனம் என்ன 


உன்னைய இரண்டு நாளே ஆளையே காணோம்.


எங்க தம்பி போயி இருந்தீங்க ? சொல்லுங்க 


தம்பி சொல்லுங்க ?


புஷ்பவனம் :-  இல்ல அண்ணே நம்ம ஊரிலே 


ரெண்டு நாளா கரண்ட்டே கிடையாது. போயி 


கரண்ட்டு ஆபீசுக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கப் 


போயிருந்தேன். 


பூங்கா :-  அவங்க என்ன சொன்னாங்க ?


புஷ்ப:-   என்னத்தை சொல்வாங்க. கரண்ட் 


வந்தாத்தானே தம்பி நாங்க தர முடியும். நாங்க 


என்ன எங்க வீட்டுக்கா கொண்டு போயிட்டோம் 


அப்படீங்கிறாங்க.


பூங்கா :-  அவங்க மேலேயும் குத்தம் சொல்ல 


முடியாது. மேலே சர்க்காரு சரி இல்லையே தம்பி.


பூராவும் பினாமி அரசாங்கம் இல்ல இப்ப நம்ம 


தமிழ்நாட்டை ஆண்டுக்கிட்டு இருக்கு. தேர்தல் 


நேரத்துலே 2011 என்ன சொன்னாங்க இந்த 


அண்ணா தி.மு.க. காரங்கன்னா நாங்க ஆட்சிக்கு 


வந்தா 3 மாசத்துலே மின்பற்றாக்குறைய அறவே 


நீக்கிடுவோம்.


அது மட்டும் இல்ல, மின் பற்றாக்குறை இல்லாத 


மாநிலமாக ஆக்குவதோடு, மின்மிகுமாநிலமாக 


தமிழகத்தை மாற்றுவோம்என்றுசொல்லித்தான் 


ஒட்டு வாங்கி செவிச்சாங்க. ஆனா நடப்பு அப்படி 


இல்லையே.எல்லாம் நம்ம தலை விதி. 


யாரையும் குத்தம் குறை சொல்லி பயன்இல்லை.


சரி தம்பி. எனக்கு நேரம் ஆச்சு. நாளைக்கு 


மீதியை பேசுவோம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன் திருமலை.இரா. பாலு 


( மதுரை T.R. பாலு )


No comments:

Post a Comment