Saturday, November 22, 2014

மது அருந்துதலைப்பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் ?






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம் :-  கள் உண்ணாமை.


குறள் எண் :-  926.


துஞ்சிவார் செத்தாரின் வேறல்லர் எங்ஞான்றும்

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்... ... ...



விளக்கம்:-  உறக்கத்தில் இருக்கும் ஒருவர் 


அந்த நேரத்தில் செத்தவரே ஆவர்.அதேபோல 


கள் உண்டவனும் அந்த நேரத்தில் நஞ்சை 


உண்டவனே ஆவான்.  இது வான்புகழ்


வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற நல்லதோர் 


திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


சுந்தரலிங்கம்:-  ஏண்ணே, ராமலிங்க அண்ணே 


நம்ம ஆதிலிங்கம் என்ன, எப்ப பாத்தாலும் 


டாஸ்மாக் கடையே கதின்னு கிடக்கான்.


அவனை திருத்த அவங்க அப்பா எம்புட்டோ 


படாத பாடு பட்டாரு. அவனை ஒன்னும் 


திருத்தவே முடியலையே.


ராமலிங்கம் :-  ஆமாங்க தம்பி. ஆதிலிங்கம் 


இருக்கானே அவன் மதுவுக்கு வாழ்நாள் 


அடிமையாக ஆகிவிட்டான். அவனை எப்படி 


திருத்த ? ரெண்டு மாசம் ஆயிருச்சு. நான் 


அவன்கிட்டே பேசி. என்னத்தைச் சொல்ல 


இந்தக் கொடுமையை. நாள் முழுசும் தண்ணி 


எழுப்புனா எந்திரிக்கவே மாட்டேங்குதான்.


செத்த பிணம்போல கிடக்கான் பயபுள்ள.


சுந்தரலிங்கம்:-  அண்ணே இது ஒன்னும் 


புதுசு இல்ல. தண்ணியைப் போட்டவன் 


எல்லோரும் செத்தவனுகதான் அப்படீன்னு 


வள்ளுவரே சொல்லியிருக்காரு இல்ல.


அதால நாம் இனிமே அந்த ஆதிலிங்கத்தோட


பழக்க வழக்கம் இல்லாம இருக்க 


வேண்டியதுதான்.அட... என்ன நான் சொல்றது.


ராமலிங்கம் :-  நீ சொல்றதுதான் சரி தம்பி.



அன்பர்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது. 



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன் திருமலை. இரா. பாலு.



( மதுரை T.R. பாலு )

No comments:

Post a Comment