Saturday, November 22, 2014
மது அருந்துதலைப்பற்றி வள்ளுவர் என்ன கூறியுள்ளார் ?
விளக்கம்:- உறக்கத்தில் இருக்கும் ஒருவர்
அந்த நேரத்தில் செத்தவரே ஆவர்.அதேபோல
கள் உண்டவனும் அந்த நேரத்தில் நஞ்சை
உண்டவனே ஆவான். இது வான்புகழ்
வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற நல்லதோர்
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நம்ம ஆதிலிங்கம் என்ன, எப்ப பாத்தாலும்
டாஸ்மாக் கடையே கதின்னு கிடக்கான்.
அவனை திருத்த அவங்க அப்பா எம்புட்டோ
படாத பாடு பட்டாரு. அவனை ஒன்னும்
திருத்தவே முடியலையே.
ராமலிங்கம் :- ஆமாங்க தம்பி. ஆதிலிங்கம்
இருக்கானே அவன் மதுவுக்கு வாழ்நாள்
அடிமையாக ஆகிவிட்டான். அவனை எப்படி
திருத்த ? ரெண்டு மாசம் ஆயிருச்சு. நான்
அவன்கிட்டே பேசி. என்னத்தைச் சொல்ல
இந்தக் கொடுமையை. நாள் முழுசும் தண்ணி
எழுப்புனா எந்திரிக்கவே மாட்டேங்குதான்.
செத்த பிணம்போல கிடக்கான் பயபுள்ள.
சுந்தரலிங்கம்:- அண்ணே இது ஒன்னும்
புதுசு இல்ல. தண்ணியைப் போட்டவன்
எல்லோரும் செத்தவனுகதான் அப்படீன்னு
வள்ளுவரே சொல்லியிருக்காரு இல்ல.
அதால நாம் இனிமே அந்த ஆதிலிங்கத்தோட
வேண்டியதுதான்.அட... என்ன நான் சொல்றது.
ராமலிங்கம் :- நீ சொல்றதுதான் சரி தம்பி.
அன்பர்களே !!
பெறுகின்றது.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் திருமலை. இரா. பாலு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment