Sunday, September 29, 2013

அறிவிலிகளின் (அறிவு அற்றவர்களின்)கூட்டத்தினுள் அறிஞர்கள் போகார் !! (போக மாட்டார்கள்) வள்ளுவர் விளக்கம் !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச் சொல்வோம் 


உலகுக்கு!!   



இனம் ஒன்றாக,மொழி வென்றாக, 


புது வேல் எடுப்போம் விடிவுக்கு!!     


நம் வெற்றிப்பாதையில் நரிகள்   


வந்தால் விருந்து வைப்போம்         


விண்ணுக்கு!!                                                      


தமிழ்இனம்காக்க வாழ்ந்திடுக !!       


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !! 


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவினில் உரையாடும் பொழுது!!





              தினம் ஒரு திருக்குறள்.               


அதிகாரம்    :-  அவை அறிதல்.               


குறள் எண்  :-   72௦.


அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்                                                      தங்கணந்தர் 


அல்லார்முன் கோட்டி கொளல்... ... ... 



விளக்கம் :-  தம் இனத்தவர் 


அல்லாதவர்களின் கூட்டத்தின்முன் 


ஒரு பொருள் பற்றி பேசுவது என்பது 


தூய்மை இல்லாத முற்றத்தில் 


சிந்திய அமிழ்தம் போன்றது.இது 


வான்புகழ் வள்ளுவர் அளித்த 

குறளும் அதன் விளக்குமும் ஆம்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-             


பொந்துமணி :- நெஞ்சு 


பொறுக்குதில்லையே !! நெஞ்சு 


பொறுக்குதில்லையே !! இந்த           


நிலைகெட்ட மனிதரை நினைந்து 


விட்டால் நெஞ்சு 


பொறுக்குதில்லையே !! நெஞ்சு 


பொறுக்குதில்லையே !!                       


அந்துமணி :-  யோவ் !! பொந்து !! 


இன்னாயா !! காலங்காத்தாலே 


என்ன தத்துவப் பாட்டெல்லாம் ? 


உம்..ஒன்னும் விளங்கலையே !! 


விவரமாச் சொல்லு தம்பி!!               


பொந்து :-  அண்ணே அந்து. இப்ப 


நான் பாடின பாட்டு, பதிக்கப்பட்ட 


தமிழனுக்காக. விளக்கம் எல்லாம் 


சொல்லிட்டு கடைசியிலேயும் ஒரு 


தத்துவப் பாட்டு ஒன்னு பாடுவேன். 


அந்து:-அந்தப் பாட்டு யாருக்கு தம்பி!!


பொந்து:- அந்தப் பாட்டு, பாதிப்பை, 


உள்ளக் குமுறலை,உணர்ச்சியில் 


தன்மான எண்ணங்களை 


உண்டாக்கிய, சீற்றம் கொண்ட 


சிங்கத்துடன் உலவிடும் உண்மைத் 


தமிழனுக்கு,தமிழ் இனத்துக்கு, தமிழ் 


இனத்தின் ஒட்டு மொத்தத் 


தலைவனை, முத்தமிழ் அறிஞனை, 


முதுபெரும் தமிழக அரசியியலின் 



சுடர் விளக்கினை பகுத்தறிவுப் 


பகலவன் தந்தை பெரியாரின் 


அருமைச் சீடனை, பேரறிஞர் 


அண்ணாவின் முழுமுதல் தம்பியை 


அரசியலில் உண்மை சாக்ரடீசை 


கலைஞர் கருணாநிதி அவர்களை, 


இந்திய சினிமாவின் நூற்றாண்டு 


கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது 


தமிழ் இனமானத் தலைவனை 


அவனமாப்படுத்தின அரக்க குணம் 


கொண்ட ஆளும் ஆட்சியாளர்களின் 


நீசத்தனமான  எண்ணம் கொண்ட 


அந்த சிறுமதிபடைத்தஅவர்களுக்கு, 


புத்தி புகட்டிடும் வண்ணம் எனது 


கடைசி பாடல் அமைந்து இருக்கும் 


என் அந்து அவர்களே !!                           


அந்து:- டேய் !! தம்பி !! பொந்து!! 


உன்னை நினைச்சா எனக்கு 


ரொம்பப் பெருமையாய் இருக்குடா!! 


இனத்துக்கு, இனத்தலைவனுக்கு 


ஒரு இழுக்கு எனகேள்விப்பட்டதும் 


துடிக்குது பாத்தியா உன் உள்ளத்து 


உணர்சிகள். அதற்காக உன்னைய 


என் மனசாரப் பாராட்டாமல் இருக்க 


முடியலைடா தம்பி. நம்ம 


திருவள்ளுவர் என்ன 


சொல்லியிருக்கார் தெரியுமாடா 


தம்பி !!                                                               


பொந்து :- சொல்லுங்க அண்ணே!! 


நீங்க எனக்கு சொன்னாத்தானே 


தெரியும் !!


அந்து :- தம்பி !! 


அறிவில்லாதவர்களின் கூடிடும் 


கூட்டத்துக்குஉண்மைஅறிவாளிகள் 


போகவே மாட்டார்கள்.போகவும் 


கூடாது. ஒருவேளை அப்படி 


போனாங்கன்னு வச்சுக்க. அது 


விலை மதிப்பில்லாத, யாருக்கும் 


அவ்வளவு எளிதில் கிடைத்திடாத 


அமுதத்தை சாக்கடையில் கொண்டு 


போய் கொட்டியதர்குச் சமம்னு 


திருவள்ளுவர் சொல்லி இருக்கார்ட 


தம்பி. அதனாலே நீ ஒன்னும் மனசு 


வருத்தப் பட்டுக்கிடாதேடா!!


தலைவர் கலைஞர் அவர்கள் அந்த 


நீசர்கள் எடுத்த விழாவிற்குப் 


போகாமல் இருந்ததுதான் 


அவருக்குப் பெருமையடா தம்பி!!   


பொந்து:- ரொம்பச் சரியாச் 


சொன்னது அண்ணன் தான். சரிஇப்ப 


நான் அந்த கடைசியில் பாட 


வேண்டிய பாடலை பாடுறேன் 


அண்ணே!!                                                       


அந்து :- பாடுறா, பாடுறா, என்அன்புத் 


தம்பி !!                                                               


பொந்து :- உலகே மாயம் !! வாழ்வே 


மாயம் !! நிலை எது நாம் காணும் 


சுகமே மாயம் !! ( ஒரு நீதிக்கு, 


நேர்மைக்கு, உண்மைக்கு, 


சத்தியத்திற்கு,உண்மை அன்னைத் 


தமிழுக்கு, அப்படி தீங்கு செய்து 


அதனால் அவர்கள், அந்த நீசர்கள் 


காணும் சுகமே மாயம்) காணும் 


சுகமே மாயம் !!                                             


அந்து :-  சூப்பர்டா தம்பி. இனிமே நீ 


வாழ்கையில நிச்சயம் முன்னுக்கு 


வந்துருவடா!! எனக்கு நேரம் ஆச்சு. 


இன்னைக்கு நிறைய வேலை 


கிடக்குடா இன்னைக்கு 


திங்கள்கிழமை அல்லவே.                 


பொந்து :- சரியாச் சொன்ன 


அண்ணே !! நீ போயிட்டு வா. நானும் 


கொஞ்சம் வேலை பார்க்கணும். 


நாளைக்கு பாப்போம் அண்ணே !! 


நன்றி !!வணக்கம் !!                                     


வாழ்வோம் நாம் அனைவரும் 


வளமுடன் !!



அன்பன் மதுரை T.R. பாலு.




Friday, September 27, 2013

சொல்லிடலாம் எளிதாக எல்லோராலும் !! ஆனா சொன்னதுமாதிரி செய்ய முடியிறது ரொம்ப கஷ்டம் !!--வள்ளுவரின் கண்ணோட்டத்தில் !!




                          தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வினைத்திட்பம்.



குறள் எண் :-  664.



சொல்லுதல் யார்க்கும் எளிய                                                                    அரியவாம் 


சொல்லிய வண்ணம் செயல்... ... ... ...



விளக்கம் :- இந்தச் செயலை 


இவ்வாறு செய்து முடிக்கலாம்என்று 


சொல்லுவது எல்லோருக்கும் 


எளியது. ஆனால் அவ்வாறு 


சொல்லியபடி செய்து முடிப்பது 


என்பது மிகவும் அரியனவாம்.             



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-   


அது 2௦11ம் ஆண்டு. மே மாதம். 


தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் 


களம் அதிகமான சூடு பிடித்த நேரம் 


அது. தமிழகத்தில் அதுவரை 


எப்போதும் இல்லாத அளவுக்கு 


மின்தடை எல்லா இடங்களிலும் 


ஏறத்தாழ 2 மணி நேரம் முதல் 3 


மணி நேரம் வரை மின்சாரம் 


இல்லாமல் மக்கள் கடந்தமுறை 


ஆட்சியில் இருந்த திராவிட 


முன்னேற்றக் கழக ஆட்சியின் மீது 


தாங்கொனாத வெறுப்பின் 


விளிம்பில் நின்று கொண்டிருந்த 


நேரம் அது. இதுதான் தக்க சமயம் 


என்று கணக்குப் போட்டு தேர்தல் 


களத்தில் குதித்தது தி.மு.க. வின் 


பரம்பரை எதிர்க்கட்சியான 


அ.இ.அ.தி.மு.க. தனது தேர்தல் 


கொள்கை அறிவிப்பினில் முதலில் 


இடம் பெறச் செய்தஅறிவிப்பு  என்ன 


என்றால் " நாங்கள் ஆட்சிக்கு 


வந்தால், வந்த மூன்று (3) 


மாதங்களுக்குள்மாநிலத்திற்குத்


தடை  ஏதும் இல்லாத மின்சாரம் 


வழங்குவோம். அதுமட்டும் இல்லை 


மக்களே !! மாநிலத்தை மின்மிகு 


மாநிலமாக மாற்றி அண்டை 


மாநிலங்களுக்கும் உபரி மின்சாரம் 


வழங்குவோம். இது அ.இ.அ.தி.மு.க. 


வின் முதல் தேர்தல் வாக்குறுதி. 


ஆனால் நடந்தது என்ன ? அதுவரை3 


மணி நேர மின்சார வெட்டு என்பது 


பிள்ளை,குட்டி,பேரன்,பேத்தி என 


அதிகமாக ஆக்கி 14 மணி நேரம் 


முதல் சில இடங்களில் 16மணி 


நேரம் வரையில் கூட மின்தடையில் 


சிக்கி சின்னாபின்னமாகிக்கொண்டு 


மக்கள் மிக மிக சிரமத்தினை 


அனுபவிக்க வேண்டியதாயிற்று. 


அ.இ.அ.தி.மு.க. வினரால் மின்தடை 


இல்லாத மாநிலமாக ஆக்குவோம் 


என சொல்லிடுவது என்பது மிக 


எளிதான செயலாக ஆனது. ஆனால் 


சொல்லியபடி செய்து முடித்திட 


முடியாமல் பாவம் ஆளும்கட்சி 


இப்ப்போது திரு திரு வென 


முழித்துக் கொண்டு இருக்கிறது. 


இதுதான் இன்றைய நிலைமை.நான் 


கூட சில நேரம் வள்ளுவர் எல்லாப் 


புலவர்களைப்போலத்தானே 


செய்யுள் இயற்றி அதனை இந்த 


உலகிற்கு அர்ப்பணித்து உள்ளார். 


இவருக்கு மட்டும் என்ன தெய்வப் 


புலவர் என்ற சிறப்பு விகுதிப் பட்டம் 


என்று எண்ணியது உண்டு. ஆனால் 


நான் மேலே குறிப்பிட்டுள்ளபடி 


தமிழகத்திற்கு ஒரு நிலைமை இது 


போலவரும் அப்போது தேர்தல் 


நடக்கும் நேரம் வரும். ஆளும் 


கட்சியாக துடிக்கும் கட்சி இதுபோல 


நிறைவேற்றிட முடியாத 


வாக்குறுதிகளை அள்ளித் 


தெளிக்கும். ஆனால் சொல்லியபடி 


செயலை செய்து முடிக்காத நிலை 


வந்து சேரும் என்று இரண்டாயிரம் 


ஆண்டுகட்கு முன்பாகவே ஒரு 


தீர்க்கதரசினமான ஒரு கருத்தை 


வள்ளுவப் பெருந்தகை அப்போதே 


வெளியிட்டதன் காரணமாக நான் 


இப்போது வெட்கித் தலை 


குனிகிறேன் ஏன் அவ்வாறு நான் 


திருவள்ளுவர்மேல் ஒரு தவறான 


அபிப்பிராயம் கொண்டு இருந்தேன் 


என்று. 


திருவள்ளுவர் என்னை 


மன்னிப்பாராக !!                                           


நன்றி !! வணக்கம் !!


அன்புடன் மதுரை T.R. பாலு.

Tuesday, September 24, 2013

ஆண்மை என்பது சராசரி மனிதனிடம் !! ஆனால் பேராண்மை ? அது யாரிடம் உள்ளது? வள்ளுவர் தரும் விளக்கம்.






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை உரக்கச்சொல்வோம்


உலகுக்கு!!


இனம் ஒன்றாக, மொழி வென்றாக,


புதுவேல்எடுப்போம்விடிவுக்கு!!


நம்வெற்றிப்பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு!!




வீரர்கள்வாழும் திராவிட நாட்டை


வென்றவர் கிடையாது !!


வேலும் வாளும் தாங்கிய மறவர்


வீழ்ந்ததும் கிடையாது !!





குள்ளநரிக்கூட்டம் வந்து 


குறுக்கிடும்!!


நல்லவர்க்குத் தொல்லைதந்து 


மடக்கிடும் !!--நீ


எள்ளளவும் பயம்கொண்டு 


மயங்காதிரு !!--அவற்றை 


எமனுலகுக்கு அனுப்பிவைக்கத் 


தயங்காதிரு !!






தமிழ்இனம்காக்க வாழ்ந்திடுங்கள்!!



தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!



ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!



தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள்


நடுவினில் உரையாடும் பொழுது!!





தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  பிறனில் விழையாமை.



குறள் எண் :-   148.



பிறன்மனை நோக்காத பேராண்மை                                                சான்றோர்க்கு


அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு... ... ...



விளக்கம் :-




அடுத்தவருடைய மனைவியை


விரும்பி நோக்காத (பார்க்காத)


குணமே பேராண்மை எனப்படுவது


அது சான்றோர்க்கு அறம் மட்டும்


அன்று.அது ஒன்றே நிறைந்த


ஒழுக்கமும் ஆகும். இது வள்ளுவர்


நமக்கு அளித்த குறளும் அதன்


விளக்கமும் ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம்:-




பொதுவாகவே ஆண்டவன்


ஸ்ருஷ்டித்த, உருவாக்கிய ,


படைப்புகளுள் ஒன்றான


மனிதப் படைப்பினில் மட்டுமே


இந்த அடிப்படை குணம் அது


ஆண்களுக்கு மட்டுமே உண்டு.


அது என்னவென்றால், தனது


மனைவி எவ்வளவு பேரழகியாக


இருந்திட்ட போதிலும்,அமைந்துள்ள


போதிலும், எல்லா ஆண்மகன்களும்


அடுத்தவனுடைய மனைவியை


பார்ப்பது,பார்த்து இரசிப்பது,


இவளை,இந்த அழகியை


மனைவியாக எவன் ஒருவன்


அடைந்திட்டானோ என


 எண்ணித்தனது  உள்ளத்தில்


காம ரசம் சுரக்க நோக்குதல்


என்பது இந்தக் கலியுகத்தில்


தவிர்க்க முடியாத ஒன்றாகவே


ஆகிவிட்டது. ஆனால் ஒரு தத்துவப்


பேராசிரியர் என்ன சொல்லி



இருக்கிறார் என்று கேட்டால்


அழகினை ரசி, ஆனால் அடைந்திட


நினையாதே என.ஆனால் சொல்வது


என்பது வெகு சுலபம். அதனை நமது


நடைமுறை வாழ்க்கையில் அமல்


படுத்துவது என்பது மிக மிகக்


கடுமையானது அது ரொம்பக்


கொடுமையானது.  ஆகவே நான்


இங்கேவாழ்ந்திடும் ஆண்களுக்கு


விடுக்கும் அன்பு வேண்டுகோள் அது


என்னவென்றால் நீவிர் பேராண்மை


உடையவராக வேண்டும் என்றால்


அது நிச்சயமாக எவன் ஒருவன்


மாற்றான் மனைவியை நோக்காமல்


பார்க்காமல் இருக்கின்றானோ


அவனிடம் மட்டிலுமே அந்த குணம்


(பேராண்மைக்குணம்) உள்ளது


என்று வள்ளுவப் பெருந்தகை


சொல்லிச் சென்று உள்ளதை நாம்


அறிவினில் கொண்டு வாழ்ந்திட


வேண்டும் என்று வேண்டி விரும்பி


கேட்டுக்கொண்டு உங்களிடம்


இருந்து விடை பெறுகிறேன்.



மீண்டும் சந்திப்போம். அதன் பின்


சிந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன்,


மதுரை TR.பாலு.

Monday, September 23, 2013

எது உண்மையான /தலையான/ நிலையான குணம் கொண்ட செல்வம் ? வள்ளுவர் தரும் விளக்கம் !!





தினம் ஒரு திருக்குறள் !!

அதிகாரம்    :-   கேள்வி.

குறள் எண்  :-   411.




செல்வத்துள் செல்வஞ் செவிச்செல்வம்                                                         அச்செல்வம் 

செல்வத்து ளெல்லாந் தலை... ... ... ... ... ...



விளக்கம்  :-   செவியால் 


கேட்டறியும் செல்வம், 


 செல்வங்களுள் ஒன்றாகப் 


போற்றப்படும் செல்வமாகும். அந்த 


செல்வம், செல்வங்கள் 


எல்லாவற்றிலும் தலையானதே 


ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் 


நமக்கு அளித்த குறளும் 


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


செல்வபுரம். ஆம் அன்பர்களே. 


இயற்கை வளங்கள் அனைத்தையும் 


ஒட்டு மொத்தக் குத்தகைக்கு 


விட்டுச் சென்றது போல எங்கு 


பார்த்தாலும் அந்த ஊரில் 


இலக்குமி தேவியின் கடைக்கண் 


பார்வை கிடைத்திட்டதாலே 


செல்வப் பூரிப்பும் வளங்களும் 


அருளும் ஒருங்கே சேர்ந்தது 



போல் அந்த ஊர், செல்வம் நிறைந்து 


வளம் இணைந்து காணப்பட்டது. 


அந்த ஊரில் உள்ள அத்தனை 


செல்வந்தர்களிலேயேயும்  மிகவும் 


பெரிய,மிட்டா,மிராசுதாராக 


விளங்குபவர் செல்வந்தர் 


செண்பகராமன். அவ்வளவு 


செல்வம் கணக்கில்லாதபடி அவரது 


வாழ்க்கையில் செழித்துக் 


காணப்பட்டது.


ஆனால்அவ்வளவுசெல்வவளங்கள் 


அவரிடம் இருந்தும் என்ன 


பிரயோஜனம்.அவரது இல்லத்தரசி/


மனைவி செல்லம் ஒரு பிறவிச் 


செவிடு. இவர் ஒன்று கேட்டால் 


மனைவியாகப்பட்ட அவள் செல்லம் 


வேறு ஒரு பதில் சொல்வாள்.


அவர்கள் இருவரின் இடையில் 


நடைபெரும்  உரையாடலை 


நீங்களும் சற்று செவிகுளிரக் 


கேட்டுத்தான் பாருங்களேன்.



செண்பகராமன்:- ஏம்மா !! செல்லம் !!


அடியே செல்லம்.என் ஞானத்திரு 


விளக்கே !! செல்லம்.(சற்றே உரத்த 


குரலில்)


செல்லம் :- என்னங்க.யாரைக் கூப்பி-


டுரீங்கோ.வேலைக்காரன்வேலனை


-த்தானே ?


செண்பக:- அட!! போதுமடி !! நான் 


உன்னாண்ட உசிரைக் கொடுத்துக் 


கத்துனது போதாது அந்தப் 


பயலையுமாகூப்பிட்டுச் சீரழியனும்.


செல்லம்:-  ஓ! சரி !!சரி !!இன்னைக்கு 


சீயக்காய்தேச்சுக்குளிக்கவெந்நீர் 


வைக்கச் சொல்றீயளா !!


செண்பக:- ஆமாடி !! ஆமா !! நல்லா 


கொதிக்கிற வென்னீர எம்மேலே 


ஊத்து. பேசாம மேலோகத்துக்கு 


போயிருவேன். உம்..நான் போன 


ஜென்மத்துல என்ன பாவம் 


செஞ்சனோ தெரியலை.உன்கிட்டே 


மாட்டிகிட்டு இந்தப் படாத பாடு 


பட்டுக்கிட்டு முழிச்சுட்டு இருக்கேன்.


செல்லம் :- (அவரது வாய் அசைவை 


வைத்துஇவளாகஒருமுடிவுஎடுத்துப் 


பேசுவது அவளின் வாடிக்கை) சரி !! 


சரி !! இன்னைக்கு முருங்கைக்காய் 


சாம்பார் வைக்கச் சொல்லுதீயளா?


செண்பக :- ஆமாடி !!(வெறுப்புடன்) 


அந்த சாம்பாரை நல்லா 


கொதிக்கவச்சு என் தலையிலே 


ஊத்துன்னு சொல்லுறேன்.


செல்லம்::- ஓ!!சரி!!சரி!! ஊருக்குப் 


போகப் போறீயளா ? எந்த ஊருக்கு !!


செண்பக:- உம்..மேலோகத்துக்கு. 


உன்கிட்ட கிடந்து நான் சனியன் 


சீரழியிரதுக்கு பேசாம


செத்துப்போயிரலாம்னு இருக்கேன்.


செல்லம்:- செட்டியாருக்கு என்ன 


ஆச்சு?நேத்துக் கூட தெருவில அவர 


பாத்தேனே செத்துப்போயிட்டாரா.


அடப் பாவமே !!


செண்பக:- இல்லடி அவரு சாவலடி. 


நான்தான் தினம்தினம் உன்கிட்ட 


மூச்சுக் கொடுத்து,மூச்சுக் கொடுத்து 


செத்துக்கிட்டு இருக்கேன். உம்!!


உனக்குப் பாக்காத வைத்தியமும் 


இல்ல.போகாத டாக்டரும் இல்ல. 


ஏன்தான் உன்னையப் போயி அந்த 


ஆண்டவன் என்னோடுசேர்த்து 


முடிச்சுப் போட்டு வச்சானோ 


எனக்கு தெரியலை. என் பிராணன் 


போவுது.


செல்லம்:- ஓ !!பீரோவில இருந்து 


என்னங்க எடுத்துத் தரனும். 


சட்டையா இல்ல வேட்டியா 


சொல்லுங்க.கேக்குறேன்ல !!


செண்பக:- இல்லடி.இல்ல.நான் இப்ப 


கட்டியிருக்குற வேட்டியை 


அப்டியேகிழிச்சுக்கிட்டு கூடிய 


சீக்கிரம் பைத்தியக்காரனா 


அலையப் போறேன் போத்தா!! போ !!


பேசாம உள்ளே !! என் உசிரை இப்ப 


நீ எடுக்காத.போ!!


செல்லம் :- சரி!!சரி!! போயிட்டு 


வாரேன்அப்படீன்னுசொல்லுதீயளா?


செண்பக:-  ஆமாடி!! ஆமா!! கூடிய 


சீக்கிரம் இந்த உலகத்தை விட்டே 


போயிரப்போறேன். ஆண்டவன் 


எனக்கு இவ்வளவு செல்வத்தை 


அள்ளி அள்ளித் தந்தாலும் என்ன 


அவன் நல்லாவே பழிவாங்கிட்டான்.


உன்னையை கண்ணாலம் கட்டி 


வச்சு.அத்தனை செல்வம் என்கிட்டே 


இருந்தும் ஒரு மதிப்பும் எனக்கு 


இல்லடி. இப்பத்தான் தெரியுது 


எல்லா செல்வத்துலேயும் பெரிய 


செல்வம் காது தான்.உம்.. அதான்


உன்ட்ட கிடையாதே. அட ஆண்டவா!


அடுத்த ஜென்மம்னு ஒன்னு 


இருந்து அதுவும் மனுஷ ஜென்மமா 


இருந்தா, யப்பா முருகா!! தயவு 


செஞ்சு உன்ட்டகெஞ்சிக்கேக்கிறேன்.


இது போலசெவிட்டுப்பொணத்தை


மட்டும் எனக்குப் பொண்டாட்டியா 


கட்டிவச்சிராதே முருகா. நீ வாழ்க!!


( இந்த உரையாடல் இத்துடன் முடிவு 


பெருகிறது அன்பர்களே !! 


பார்த்தீர்களா !! செவிச் செல்வம் 


என்பது மனிதனின் வாழ்வில் 


எவ்வளவு முக்கியம் என்று.


அதனால்தான் நமது வள்ளுவர் 


இந்த செவிச் செல்வத்தை 


எல்லாவிதமான செல்வங்களுள் 


தலையானது என சொல்லிவிட்டுச் 


சென்று இருக்கிறார்.)


கொசுறு :- இதுல பாருங்க மனைவி 


செவிடா இருக்கிறதுல நமக்கு ஒரு 


சௌரியமும் கூட இருக்குதுங்க.அது 


என்னான்னு கேட்டீங்கன்னா நாம 


சிரிச்சுக்கிட்டே அவள  அவ 


முன்னாடியே ,அட மூதேவி !!


சனியனே!! ஏண்டி என் பிராணன


வாங்குற!! அப்படி இப்படீன்னு 


சகட்டு மேனிக்கு அவள வச்சுகிட்டே 


அவ எதிரிலேயே நம்ம மனசு குளிர 


திட்டலாம்லே.அந்த சுகம் வேற 


யாருக்கு கிடைக்கும். செவிட்டுப் 


பொம்பளைய கட்டிகிட்டவனுக்கு 


தானே. அட என்ன நான் சொல்றது?



நன்றி!! வணக்கம் !!


மீண்டும் அடுத்த குறள் 


விளக்கத்தில் உங்கள் 


அனைவரையும் சந்திப்போம்.


அன்புடன் மதுரை T.R. பாலு.


Thursday, September 19, 2013

எதற்கு நாம் பயப்பட வேண்டும்--வள்ளுவர் தரும் அறிவுரை !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !!


இதை உரக்கச் சொல்வோம்


உலகுக்கு !!


இனம் ஒன்றாக,மொழி வென்றாக,


புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!


நம் வெற்றிப் பாதையில் நரிகள்


வந்தால் விருந்து வைப்போம்


விண்ணுக்கு!!



தமிழர் இனம் காக்க வாழ்ந்திடுக !!



தனித்தமிழில் மட்டும் பேசிடுக !!



ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !!



தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 



நடுவில் உரையாடும் பொழுது !!


தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்    :-   அறிவுடைமை.


குறள் எண் :-     428.


அஞ்சுவ தஞ்சாமை பேதமை                                                                            அஞ்சுவது 

அஞ்சல் அறிவார் தொழில்... ... ... ...



விளக்கம்  :-   நாம் நமதுவாழ்வினில் 


பயப்படுவதற்கு   உண்டான 


அஞ்சத்தக்கவற்றை கண்டு 


அஞ்சாமல் இருப்பது/பயப்படாமல் 


இருப்பது என்பது அறியாமையே 


ஆகும். 


 பயப்படுவதற்கு என்று உண்டான/


அஞ்சத்தக்கவற்றைக் கண்டு 


அஞ்சுவதே/பயப்படுவதே 


அறிவுஉடையவரின் தொழிலாகும். 


இது வான் புகழ் வள்ளுவர் நமக்கு 


அளித்த குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-  


பொதுவாக இந்தக் கலிகாலத்தில் 


நாம் நம்மில் அநேகர் 


பயப்படவேண்டிய விஷயங்களுக்கு 


பயப்படாமல் வாழ்ந்து வருதலே 


நமக்கு வாழ்வில் பல வகையான 



துன்பங்கள்வருவதற்குநமக்கு நாமே 


காரணகர்த்தாக்களாக ஆகி 


விடுகிறோம் என்பதே 


உண்மையாகும்.

எப்போது நாம் பயப்படவேண்டிய 


செயல்களுக்கு பயந்து நடந்திட 


முனைகிறோமோ அப்போதே நாம் 


இனிமேல் அச்செயல்களைச் செய்து 


விடாமல் இருந்திட முயல்வதற்கு 


வழிகாட்டும் பாதையாக அதுஅங்கே 


அமைந்துவிடுகிறது. எவன் நாம் 


செய்யும் செயல்களை பார்க்கிறான் 


என எண்ணி அப்படிப்பட்ட பாவச் 


செயல்களை செய்திடத் 


துணிகிறோமோ 


அது ஒன்றே போதுமானது நாம் 


பாவக்குழியில் விழுந்துவிட நாமே 


காரணகர்த்தாக்களாக 


ஆகிவிடுகிறோம் 


என்பதே உண்மை ஆகும்.  நாம் 


செய்யும் ஒவ்வொரு செயலையும் 


மேலே உள்ள எல்லாம் வல்ல 


இறைவன்நம்மைப் பார்த்துக்



கொண்டு இருக்கிறான் என்று 


எண்ணினாலே போதுமானது.


நிச்சயம் நாம் அதுபோன்றதொரு 


செயல்களை செய்திடத் துணிவது 


இல்லை என்ற மன உறுதிப்பாடை 


அது  நமக்கு தந்து விடுகிறது 


அன்பர்களே !! எனவே நாம் 



நமது வாழ்க்கையில் இனிமுதற்


கொண்டாவது அஞ்சுவதற்கு அஞ்சி 


நடந்திட முயற்சிதனை   நாம் 


மேற்கொள்வோமாக என உறுதி 

எடுத்துக்கொள்வோம் அன் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!


நன்றி  !!  வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R.  பாலு.