Monday, March 10, 2014

திருட்டுத்தனம் மூலமாக சம்பாதித்த பணம் முடிவில் அழிந்தே போகும் !! வள்ளுவர் வாக்கு இது !!










    பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் 



                       ரஹீம் !! 




அஸ்ஸலாமு அலேக்கும் !!



*********************************

தினம் ஒரு திருக்குறள்.

*********************************



அதிகாரம்   :-  கள்ளாமை.


குறள் எண் :-  283.


களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து 


ஆவது போலக் கெடும்... ... ... ... ... ... ... ... ...




விளக்கம் :-  களவு செய்து 


(திருட்டுத்தனம் மூலமாக--ஊழல் 


செய்து அதன் மூலம்) ஈட்டிய 


பொருள் பெருகுவது போலத் 


தோன்றி, நம்மிடம் இருப்பது போல 


இருந்து, இறுதியில், அந்த செல்வம் 


இயல்பாக இருக்கவேண்டிய கால 


அளவையும் கடந்து இல்லாமல் 


போய் கெட்டுவிடும் காணாமல் 


போய்விடும் தன்மையைப் 


படைத்தது. இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிய குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                                   



நமது நாட்டுநடப்பு விளக்கம் :-             



அந்தப் பெண்மணி அந்த 


மாநிலத்தின் தலைமைப் 


பொறுப்பில் ஆளும் முதல் 


அமைச்சர். தனது பதவியைப் 


பயன்படுத்தி இவர் நேர்மைக்கு 


மாறான வழிகளில் பல்லாயிரம் 


கோடிகள் பணத்தைச் சம்பாதித்து 


பதுக்கி வைத்து உள்ளார். ஆனால் 


மனதில் எள்ளின் முனையளவுகூட 


நிம்மதி என்பது கிடையவே 


கிடையாது. உடலில் ஏகப்பட்டநோய் 


அதன் தாக்குதல்கள். இவருக்கு 


உயிர்த்தோழி ஒருவர் உண்டு. 


அவருக்கு இவர்தான் அரசியல் 


ஆலோசகர். இந்தத் தோழிதான் 


இவரைக் கெடுத்து குட்டிச்சுவர் 


ஆக்கிய பெருமை தோழியையே 


சாரும். இவர்கள் நேர்மைக்கு 


புறம்பாக இலஞ்சம், மற்றும் ஊழல் 


செய்து சம்பாதித்த பணத்தின் 


மூலமாக சேர்த்த சொத்துக்களும் 


பல்லாயிரம் கோடிக்கணக்கான 


பணமூட்டைகளும் வள்ளுவர் 


சொன்னது போல காணாது 


போய்விடக் கூடிய அந்த நல்ல 


நாளைத்தான் மாநிலத்தில் வாழ்ந்து 


வரும் மக்கள் எதிர்பார்த்துக் 


காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். 


காலம் தரும் பதிலை யாராலும் 


தடுத்து நிறுத்திட முடியாது. இது 


பேரறிஞர் அண்ணாவின் வாக்கு.

No comments:

Post a Comment