குறிப்பு அறிதல் !! காமத்தில் இது மிகமிக அவசியமானது !! வள்ளுவர் வாக்கு இது !!
பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் !!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
கொடையாளனுமாகிய அல்லாஹ்வின்
திருப்பெயரால் நான் இந்த திருக்குறள்
விளக்கத்தை நான் இங்கே பதிவு
செய்கிறேன்.
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- குறிப்பறிதல்.
குறள் எண் :- 1௦91.
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றன்நோய் மருந்து... ... ... ... ...
விளக்கம் :- இவளுடைய மை தீட்டிய கண்களில்
உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்.
அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும்
நோக்கம். மற்றொன்று அந்நோய் தீர்க்கும்
மருந்தாகும்.
மீண்டும் அடுத்த குறள் விளக்கத்தில் நாம்
அனைவரும் சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment