Sunday, March 30, 2014

மனைவியவள் மெலிந்ததற்கு கணவன்தான் காரணமா ? வள்ளுவர் தரும் விளக்கம் !!










தினம் ஒரு திருக்குறள் !!                         



அதிகாரம்   :-  உறுப்புநலன் அழிதல். 



குறள் எண் :-  1236.                                          


தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் 


கொடியார் எனக்கூறல் நொந்து ... ... ... ... ... ... ... ... 



விளக்கம் :-  வளையல்கள் கழன்று, தோள்களும் 


மெலிந்து போனதால், ( இதனைக் காண்போர்) 


எனது காதலரைக்/(கணவரைக்) கொடியவர் 


என்று கூறுவதைக்கேட்டு, மனம் நொந்து 


போகின்றேன்.  இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு 


அருளிய திருக்குறளும் அதன்விளக்கமும் ஆகும்.

No comments:

Post a Comment