Monday, March 31, 2014

தாலி பெண்ணுக்கு வேலியா ? இல்லை கேலியா ? திருவள்ளுவர் தரும் விளக்கம்.









              தினம் ஒரு திருக்குறள் !!             


அதிகாரம்:வாழ்க்கைத்துணைநலம். 


குறள் எண் :- 57.                                         


சிறைகாக்குங்காப்பு எவன் செய்யும் மகளிர்   


நிறைகாக்குங் காப்பே தலை... ... ...                              



விளக்கம் :-  சிறையில் வைத்து பெண்களை/


மனைவியை காப்பாற்றிட இயலுமா ? பெண்கள் 


தங்களைத் தாங்களே தமது தூய்மையான (?) 


கற்பினால் காப்பாற்றிக் கொள்ளும் காவலே 


தலைசிறந்த காவல் ஆகும்.                                         



நமது நாட்டு விளக்கம் :-  பொதுவாகவே இந்த 


உலகம் ஆண் ஆதிக்க சமுதாய அமைப்பில்       


உள்ளதாகவே உலகம் தோன்றிய நாள் முதல் 


இன்றையதினம் வரை சுழன்று கொண்டு 


இருக்கின்றது என்பதுதான் உண்மை. ஆண்கள் 


ஆயிரமாயிரம் பெண்களைப் பார்க்கலாம், 


பேசலாம்,பழகலாம்,சிரிக்கலாம்,அவ்வளவு ஏன்? 


அதனையும் தாண்டி உடலுறவு கூட வைத்துக் 


கொள்ளலாம். ஆண்களைப் பொறுத்த வரையில் 


அது ஒரு தவறாகவே அவர்களுக்குத் தெரியாது. 


ஆனால் இதற்கு சற்று மாறுதலாக ஒரு பெண் 


வேறு ஒரு ஆடவருடன் நேருக்கு 


நேர் பார்த்தாலே எல்லாம் போச்சு. இவளோட 


புருஷனே கேட்பான் ஏண்டி அவனுக்கும் 


உனக்கும் எத்தனை வருஷமா பழக்கம்டி, 


எனக்குத் தெரியும்டி. நீ அவனோட சிரிச்சு சிரிச்சு 


பேசும் போதே. உள்ளதைச் சொல்லுடி. அவன் 


என்ன உனக்கு மாமனா இல்ல மச்சானா. என்று 


சொல்லிக்கொண்டே இந்தப் பெண்குலம் 


வாங்குகிற அடியும் ஏச்சும் பேச்சும் அப்பப்பா 


சொல்ல வார்த்தை இல்லை இங்கே. எல்லாம் 


இந்தக் கலிகாலத்தின் கொடுமை இது. தாலி 


என்று ஒன்றினைக்கட்டி அதில் மூன்று முடிச்சு 


போட்டுவிட்டால் போதும் அவள் தமக்கு அடிமை 


இதுதான் ஆண்கள் உலகினில் என்றென்றும் 


சட்டம். இந்தத் தாலி உண்மையில் பெண்களுக்கு 


வேலியா ? இதற்கு மனைவி மதிப்புத் தரும் 


வரையில் மட்டுமே அது தாலி. சரிதான் போடா 


என்று புருஷனைப் பார்த்து, வெறுத்து அவள் ஒரு 


முடிவுக்குள் வந்துவிட்டாள் என்று 


வைத்துக்கொண்டால் அந்த மஞ்சள்கயிறு ஒரு 


கேலிதான். கற்பு என்பது பெண் ஆண் 


இருவருக்கும் பொதுவான ஒன்று. அதிலும் 


சென்னை போன்ற பெருநகரங்களில் குறிப்பாக 


வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் 


இன்றைக்கும்கூட தாலிக்கயிறை தங்களது 


மேல் சட்டைக்குள்ளாக மறைத்துக்கொண்டு 


செல்வதை நான் சர்வ சாதாரணமாக இங்கே 


பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். 


இதுவும்கூட கலி காலத்தின் பலகொடுமைகளில் 


இதுவும் ஒன்றுதான். புருஷன் அவனது 


அலுவலகத்தில் வேலை செய்யும் 


மனைவியைவிடவும் அழகான பெண்களோடு 


பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அதுஉடலுறவு 


வரையிலும் கூட செல்வதை ( சம்பந்தப்பட்ட 


பெண்ணும் ஏற்கனவே இன்னொருவருக்கு 


மனைவியாகஇருப்பதுதான்இங்கே வேதனைக்கு 

உரிய விஷயம்) நாம் பார்க்கிறோம். இந்த 


விஷயம் தெரிந்த மனைவி, அவள் என்ன 


செய்வாள் ? அவள் என்ன மரத்தால் செய்த 


பதுமையா என்ன ? அவளும் திசை மாறிய 


பறவையாக மாறி கண்டதே காட்சி, கொண்டதே 


கோலம்என்றுவாழ்வதுதான் இந்ததலைநகரில் 


மிகப் பெரும்பான்மையான இடங்களில் 


அன்றாடம் நடந்துவரும் சம்பவம் இது உண்மை.


இதுதவிர்க்கவேமுடியாதசம்பவமாகஆகிவிட்டது 


என்பதுதான் கண்ணீர் கசிந்திடும் நிகழ்வுகளாக 


உள்ளது என்று சொன்னால் அதில் இரண்டாவது 


கருத்துக்கு இடமில்லை. நடப்பது எல்லாம் அந்த 


நாராயணன் செயலே. அதனால்தான் நான் எந்த 


ஆண்களைச்சந்திக்கின்றபோதும் (அவர்களுக்கு 


எத்தனைகுழந்தைகள் என்று கேட்கும்நேரத்தில்) 


உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று 


கேட்கவே மாட்டேன் அன்பர்களே !!  உங்கள் 


மனைவிக்கு எத்தனை குழந்தைகள் ?என்றுதான் 


கேட்பேன். (அந்தக் குழந்தைகள் யாருக்குப் 


பிறந்திருந்தாலும் கூட ) இறைவன் தவறு 


செய்பவர்களையும், தவறு செய்திடத் 


தூண்டுபவர்களையும் நரகத்தில் 


தள்ளுவானாக.தண்டிப்பானாக.                                 


அன்பே சிவம். அறிவே கடவுள். 


நன்றி வணக்கம் 


 அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment