Monday, March 24, 2014

நமது வருமானத்தை எப்படி செலவழிக்கவேண்டும் ? வள்ளுவர் தரும் அறிவுரை !!







தினம் ஒரு திருக்குறள் !!


அதிகாரம்    :-   வலியறிதல்.


குறள் எண் :-   479.



அளவறிந்து வாழாதான் வாழ்க்கை 

                                                         உளபோல 

இல்லாகித் தோன்றாக் கெடும்... ... ... 


விளக்கம் :-  தனது வருமானத்தின் 


அளவு அறிந்து வாழாதவனுடைய 


வாழ்க்கை எல்லா வளமும் 


இருப்பது போல தோன்றி முடிவில் 


இல்லாமல் கெட்டு அழிந்துபோகும். 


இது வள்ளுவர் நமக்கு 


அருளிய குறளும் அதன்விளக்கமும் 


ஆகும்.




நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  


ராமன் :-  டேய் தம்பி லெட்சுமணா 


உனக்கு சேதி தெரியுமாடா ?


லெட்சு:-  என்னடா இன்னைக்கு புது 


விஷயம் ?சொல்லு. 


சொன்னாத்தானே தெரியும் 


ராமன் :- சொல்றேன். நம்ம தீபக் 


சுந்தரம் இல்ல அவன் இப்ப ரொம்ப 


பணத்துக்குக் கஷ்டப்பட்டு


சிரமப்பட்டு முழிக்கிறானாம்டா.                          

லெட்சு :- என்னடா சொல்றே ? 


ஏண்டா மாசம் 1.5 லட்சம் ரூபாய் 


சம்பளம் வாங்குறானே அவன். 


எப்படிடா அவனுக்கு கஷ்டம் வரும் ?      

ராமன் :-  அதோ தீபக் வர்றான். 


அவனையே நாம கேப்போம். 


என்னடா உன்னைபத்தி ஊர்லே பல 


பேர் பல விதமா பேசுறாங்க ? என்ன 


ஆச்சுடாஉனக்கு. சொல்லுறா.


தீபக்:-  ஆமா நீங்க கேள்விப்பட்டது 


உண்மை.மாசம் சம்பளம் என்னமோ 


ரூபாய் ஒன்னரை லட்சம்.


ஆனா நான் வாங்கியிருக்கிற கடன். 


அதுக்கு நான் ரொம்பவே 


சிரமப்படுகிறேன்டா  


வீட்டுக்கடன் 3௦,௦௦௦ கார் கடன்2௦,௦௦௦ 


இன்சூரன்ஸ் 1௦,௦௦௦கிரெடிட் 


கார்டுக்கு 5௦,௦௦௦ பெர்சனல் லோன் 


2௦,௦௦௦ ஆக மொத்தம் 1,3௦,௦௦௦ 


போச்சுன்னு சொன்னா மீதி 2௦,௦௦௦ ஐ 


வச்சு குடும்பம் நடத்தரொம்ப 


சிரமப்படுகிறேண்டா. என்ன 


செய்யிறதுன்னு ஒண்ணுமே 


புரியலைடா.


ராமன் :- தம்பி பட்டுக்கோட்டை 


கல்யாண சுந்தரம் என்ன 


சொல்லியிருக்கார்னா கடனை 

வாங்கி மாடி வீடு 


கட்டக்கூடாதுன்னு. பேசாம 


வீட்டை, காரை வித்துட்டு மத்த 


கடனை அடை.கிரெடிட்கார்டு அதை 


பாங்க்லே திருப்பி கொடு.


கடனைப்பூராவும் 


அடைச்சாத்தாண்டா மனிசன் 


நிம்மதியா வாழ முடியும். கடனை 


அடிச்சுட்டு ஒரு 1௦,௦௦௦ க்கு வீட்டை 


வாடகைக்கு பிடி.  

நிம்மதியா வாழுடா . உடனே அந்த 


வழியைப் பார். இதுதான் நாங்கள் 


தரும் அறிவுரை.


தீபக்:- ரொம்ப சந்தோஷம்டா. 


இன்னைக்கே அதற்கான முயற்சி 


எடுக்கிறேன். 


ரொம்ப ரொம்ப நன்றி.


****************************************


அன்பர்களே !! குறள் விளக்கம் 


இத்துடன் நிறைவு 


அடைகின்றது.


நன்றி !! வணக்கம் !!



அன்புடன் மதுரை T.R. பாலு. 

No comments:

Post a Comment