Tuesday, November 10, 2015
மழையின் சிறப்பு !! வான்புகழ் திருவள்ளுவர் தரும் விளக்கம் !!
அஸ்ஸலாமு அலேக்கும் !!
அளவற்ற அருளாளனும் நிகரற்ற
கொடையாளனுமாகிய எல்லாம் வல்ல
அல்லாஹ் வின் திருப்பெயரால் இங்கே
எழுதிடத் துவங்குகின்றேன்.
மழைக்காக உலகிலே எந்தக் கவிஞனும்
செய்திடாத ஒரு மாபெரும் சிறப்பினை அந்த
மழைக்கு அளித்து அதற்காக
வான் சிறப்பு !!
என்று பெயரில் தனி ஒரு அதிகாரத்தை எடுத்து
அதில் பத்து குறளை எழுதிமழைக்குப்பெருமை
சேர்த்திட்ட புலவன் இப்பூவுலகினில்
திருவள்ளுவரைத்தவிர வேறு யார் இருந்திட
முடியும் ?
திரை உலகினைப் பொறுத்தவரை இந்த மழை
என்பது அங்கே காதலனும், காதலியும்
நனைந்துகொண்டே ஆடியும் பின்னர்
பாடியும் அந்தக் காம உணர்வினை
வெளிப்படுத்திக்கொள்வதற்காகவே
அமைந்திட்டாலும் கூட, அந்த சூழ்நிலையை
பாட்டுக்கோர் தலைவன் பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம், ஏழை அழுகின்ற
கண்ணீருக்கு இணைசெய்து எழுதிய பெருமை
அவரைத்தவிர வேறு எந்தக் கவிஞனுக்கும்
இல்லை என்பதனை நான் இங்கே
மெத்த பணிவன்புடன் கோடிட்டுக்காட்டிட
பதிவு செய்திடக் கடமைபட்டுள்ளேன்.
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே !!
என்று பாடி மழைத்துளியை ஏழை விடுகின்ற
குறள்களில் எனக்கு மிகவும் பிடித்த குறள்
இதுதான்.
அதிகாரம் :- வான் சிறப்பு.
குறள் எண் :- 15.
எடுப்பதூஉம் எல்லாம் மழை... ... ...
விளக்கம் :- மழை பெய்யாமல் உழவர்களை
அழிப்பதும்பின்னர் நின்று பெய்து உழவர்களை
வாழ வைப்பதும் அந்த மழையே ஆகும்.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்
ஆகும்.
நன்றி !! வணக்கம் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment