திருடர்களும் மக்களைப்போலத்தானே இருக்கிறார்கள் !! வள்ளுவர் ஆராய்ச்சி !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- கயமை.
குறள் என்ன :- 1071.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்டது இல்... ... ...
பொருள் :- கயவர்கள் ( திருடர்கள்) மக்களைப்
போலவே இருப்பார்கள். அவரைப்போல
உருவத்தில் ஒத்தவர்களை, வேறு எந்த ஒரு
இனத்திலும் யாம் கண்டது இல்லை.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்குஅருளிச்சென்ற
திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நாட்டு நடப்பு விளக்கம் :-
பெரியசாமி :- வாடா கந்தசாமி மவனேகுப்புசாமி.
என்னடா எம்புட்டு நாளாச்சு உன்னையப் பாத்து.
நல்லாக்கீறியா. உம்...உங்க ஏரியாலே வெள்ளம்
அல்லாம்வடிஞ்சிருச்சா.இல்லாங்காட்டிஅப்டியே
தான் கீதா ? சொல்றா தம்பி.
குப்புசாமி :- அட.. போண்ணே..உன்க்கு என்னப்
பாத்தா என்ன லந்தாக்கீதா ? ஒரு மண்ணும்
தண்ணி வடிந்சாப் பாடில்ல.
எந்தஒரு அதிகாரியும் நேர்ல வந்து பாக்கலே.
எந்த ஒரு தம்படி உதவியும் செயலே. இங்க
என்ன சர்க்காரா நடக்கிது. அம்புட்டும் திருட்டுப்
பசங்க. எவன்டா அசந்துருக்க்கான். எவன் வூட்டு
பொருளை அமுக்கி ஆட்டையப் போடலாம்.
இப்டிதானே அல்லாப் பசங்களும் கீறாங்க.
ஆனா நேர்ல பாத்தா அப்படியே சுத்தமான
புத்தன்போல இருப்பானுக. இவன்கூடத்
திருடனா ?அப்டீங்கற மாதிரி !!
இவனுக செய்றதுபூராமே திருட்டுப் பொழைப்பு.
உக்கும்...இதுலே இவனுகளுக்கு சாமியாடின்னு
பட்டம் வேற. என்னைக்குத்தான் இவனுக
திருந்தப் போறாங்களோ தெரிலே அண்ணே.
பெரிய :- உம்...சரி..வுடுறா..வுடுறா..அத்தாண்டா
தம்பிஉல்கம்.வள்ளுவர்இன்னாசொல்லிக்கீறாரு
மேலே எழுதிக்கிற திருக்குறளைப் படிறா தம்பி.
அல்லாமே புரியும் உன்க்கு. வரட்டாடா தம்பி.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை.இரா. பாலு.
No comments:
Post a Comment