Sunday, November 22, 2015

ஒரு அரசாங்கம் எப்போது சீர்கெட்டுப் போகிறது ? வள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-  தெரிந்து செயல்வகை.

குறள் எண்:-  456.



செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானும் கெடும்... ... ... 

பொருள்  :-  செய்யக்கூடாத செயல்களைச் 
செய்தாலும் அழிவினைத்தரும்.  செய்திட
வேண்டிய செயல்களைச் செய்யாமல் 
இருந்தாலும் அது அழிவினைத் தரும்.
இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச் 
சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் 
ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம்:-

மாணிக்கம் :-  வாடா மன்னாரு உங்களோட
ஏரியாவுல மழை,வெள்ள பாதிப்பு எப்படி 
இருக்குது. இதுக்கு என்ன மூலகாரணம் 
உனக்குத் தெரியுமா ?

மன்னாரு :-  என்ன அண்ணே !! காலையிலே இப்புடி ஒரு கேள்வியைக் கேக்குறீங்க. கைப்புண்ணுக்கு கண்ணாடியா தேவை. அண்ணே இதுக்கு எல்லாம் முக்கிய 
காரணம் நம்ம தமிழக அரசாங்கத்தோட 
கையாலாகத்தனமும், நிர்வாகச் சீர்கேடும் 
என்பதுலே எனக்கு சந்தேகம் இல்லை. இதுபோல எதிர்காலத்துலே நடக்கும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் வருஷத்துக்கு முன்பே அய்யன்வள்ளுவர்எச்சரிக்கைசெய்திருந்தும் 
அம்மையாரோட ஆணவ,அராஜகப்போக்கு 
மட்டுமே கொண்ட இந்த ராசாங்கம் செய்ய 
வேண்டிய எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை 
எதுவும் செய்யாததாலும், ஆறு,குளம்,கால்வாய்,
கண்மாய் இந்த இடங்களில் எல்லாம் வீட்டு மனை போட்டு அழிச்சதாலும் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்கு. டாஸ்மாக் கடையத் திறப்பதிலே காட்டுற அக்கறையையும் ஆர்வத்தையும் ஒரு சதவீதம் இந்த கால்வாய் சீரமைப்பு, ஏறி,குளம் இவற்றை தூர் வாரி ஆழப்படுத்தி இருந்தா அது ஒன்னு போதும். இந்த பேரழிவிற்கு முக்கியகாரணம் நிர்வாகம் என்றால்என்னஎன்றேதெரியாத அ.இ.அ.தி.மு.க. அரசேதான் அந்த அரசாங்கம் மட்டும்தான். அதை வழிநடத்திச் செல்லும் அம்மையார்தான்.இந்தப் பழியும் பாவமும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அதைத் தீர்க்க இந்த ஜோடிகளால் முடியவே முடியாது.


நன்றி !! வணக்கம் !!

அன்புடன்.திருமலை.இரா.பாலு.

No comments:

Post a Comment