Friday, November 13, 2015

அமைச்சராக இருக்கத் தகுதி படைத்தவர் யார் ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!






          தினம் ஒரு திருக்குறள்.


           அதிகாரம்  :-  அமைச்சு. 


          குறள் எண் :-  631.





கருவியும் காலமும் செய்கையும் செய்யும் 

அருவினையும் மாண்டது அமைச்சு... ... ...


பொருள் :-  செயலுக்கு உரிய கருவி, அந்தச் 

செயலை செய்திட ஏற்ற  காலம், செய்திடும் 

முறை, செய்கின்ற செயல், ஆகிய இவை 

அத்தனையையும் ஆராய்ந்து அரசரிடம் 

கூறிட வல்லமை படைத்தவனே அமைச்சன் 

ஆவான். இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 

திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

தங்கச்சாமி :- என்னடா தம்பி பொன்னுச்சாமி,

நாட்டுலே பத்து நாளைக்கும் மேலாக மழை

இப்படி கொட்டு கொட்டுன்னு ஊத்தித் தள்ளுது.

நம்ம சென்னையே சும்மா நாறி நாசக்காடா 

கிடக்குது. இங்க என்ன அரசாங்கம்னு எதாச்சும் 

நடக்குதா ? அமைச்சர்ன்னு எவனாவது இங்கே 

அரசாங்கத்திலே வேலை செய்யுறாய்ங்களா ?

எனக்கு ஒண்ணுமே புடிபடலே. உனக்கு ஏதாவது 

புரியுதாடா தம்பி.


பொன்னுச்சாமி :-  என்ன அண்ணே இப்படி ஒரு 

கேள்விய படக்குன்னு கேட்டுப்புட்டீங்க. நம்ம 

அரசுலேதான் முப்பதுக்கு மேலே தலையாட்டி 

பொம்மைங்க, அமைச்சர் எனும் பெயரில் சட்ட 

மன்றத்துலே மேஜையைத் தட்டிக்கிட்டும்,

ஆத்தாளைப் பார்த்தவுடன்,நெடுஞ்சாண்கிடையா

கீழே விழுந்து கும்பிடுறதுக்கும் ஆகாயத்துலே

போனாலும் ஆத்தாளை கீழே பூமியிலே இருந்து-

-கிட்டே வனத்தை நோக்கி கும்புடு போடுகிற 

அடிமைங்க இருக்கானுக அமைச்சர்ங்கிறபேரில.

ஆனா ஒருத்தனுக்கும் சொல் புத்தியும் இல்ல.

சுயபுத்தியும்கிடையாது.அவங்கஅத்தனைபேரும் 

அடிமைங்க. செய்யச்சொன்னா செய்வானுக.

சொந்த அறிவு இருந்திருந்தா, நம்ம ஊரு இப்படி 

நாறி நாசக்காடா ஆகியிருக்குமா  ? 

இல்ல இம்புட்டு தண்ணிலே நாம எல்லோரும் 

இடுப்பளவுக்கு நீந்திக்கிட்டு பொழைப்பு 

நடத்திக்கிட்டுத்தான்  இருப்போமா. 

இன்னும் ஆறு மாசம் நாம எல்லோரும் இந்தக் 

கொடுமைய தாங்கித்தான் ஆகணும். 2016 ல 

நடைபெற இருக்குற சட்ட மன்றத் தேர்தல் வர்ற 

வரைக்கும். அப்பவாவது திறமையான, 

சொந்தமா சிந்திக்கிற அறிவு உள்ள 

அமைச்சர்களை வைத்து திறமையா ஆட்சி 

புரிகின்ற ஒரு அறிஞர், கலைஞர் 

தலைமையிலே இந்த தமிழ்நாட்டைக் 

காப்பாத்துகிற ஆட்சி வரும் வரைக்கும் பேசாம 

நாம அனுபவிச்சுத்தான் ஆகணும்.வேற 

வழிஇல்லை. ஒரு அமைச்சர் என்று 

சொன்னால், எப்படி இருக்கவேண்டும் என்று 

நம்ம திருவள்ளுவர், மேலே குறிப்பிட்டு 

இருக்கிற திருக்குறளில் அய்யன் திருவள்ளுவர் 

எம்புட்டு அழகா சொல்லியிருக்காரு. 

அத்த படிச்சாலாவது இந்த அடிமைங்க பெயரில் 

வாழ்கின்ற மந்திரிங்க திருந்துவாங்கன்னு 

நினைக்கிறீங்க. கிடையவே கிடையாது. 

இத்த படிக்குறதுக்குக் கூட இவனுக 

ஆத்தா கிட்டே அனுமதி வாங்கணும். நல்ல 

வேளை,  ஒன்னுக்கு, வெளியே போறதுக்காவது 

சொந்தமா முடிவெடுத்து செயல்படுறானுகளே 

அந்த அளவுக்கு மகிழ்ச்சி. இல்லன்னு சொன்னா 

இருக்குறஇடம்நாறிடும்இல்ல...அதனாலதானோ 

என்னவோ. சரிங்க தங்கச்சாமி அண்ணே நான் 

வாறன். என் பொண்டாட்டி, புள்ளைகளை நான் 

ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும். வரட்டா.



நன்றி !! வணக்கம் !!


அன்புடன். திருமலை.இரா. பாலு.

No comments:

Post a Comment