Wednesday, November 18, 2015

நேர்மை நிலை இன்றி பிறர் சொத்துக்க்களை அபகரிப்போர்கள் இறுதியில் என்ன நிலையை அடைவார்கள் ? வள்ளுவர்தரும் விளக்கம் !!






தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  வெஃகாமை.


குறள் எண் :-  171. 


நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்... ... ...


பொருள் :-  ஒருவன் நடுநிலை தவறி பிறரது 
பொருளை/சொத்துக்களை கவர/ஆக்கிரமிக்க 
எண்ணினால், அவனது குடும்பமும் அழியும்.
அவனுக்கு பற்பல கேடுகளும் குற்றங்களும் 
வந்து சேர்ந்திடும். இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் விளக்கமும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம் :-

கண்ணாயிரம் :-  வாடா !! மன்னாரு. என்னடா 
உங்க பகுதியிலே மழை,வெள்ளம் பாதிப்பு 
ஏதாவது உண்டா ? விவரமாச் சொல்லுடா தம்பி.

மன்னாரு :- என்னாது...எதாச்சும் பாதிப்பா ?
அண்ணே !! குடிமுழுசும் மூழ்கிப்போச்சு அண்ணே. குடி முழுசும் மூல்கிப்போச்சு 
குடிசை கொசஸ்தலம் ஆத்து வெள்ளத்துலே 
அடிச்சுட்டு போயிருச்சு. நானும்பொண்டாட்டியும் 
புள்ளை குட்டிகள் மட்டும்தான் மிச்சம்.  கட்டிக்க மாத்துத் துணி கூட கிடையாது. அதான் அண்ணனைப் பார்த்து உங்க கிட்டே எதாச்சும் வாங்கிட்டுப் போலாம்னுதான் வந்தேன்.

கண்ணா;-  என்னடா தம்பி. இப்படி கேக்குறே.
நீ வருவேன்னு தெரியும். அதான் உனக்கும் உன் 
பொஞ்சாதிக்கும் புள்ளைகளுக்கும் துணி,மணி,பணம் எல்லாமே எடுத்து வச்சிருக்கேன்டா. போறப்போ வாங்கிட்டு 
போடா தம்பி. 

மன்னாரு :- அண்ணே !! ரொம்ப நன்றி அண்ணே!!
நீங்க செஞ்ச இந்த உதவியை சாகுறந்தட்டிக்கும் நான்,உன் தம்பி, மறக்கவே மாட்டேன்.

கண்ணா :- விடுறா..விடுறா..அழுகப்படாது. அது 
சரி. வான்புகழ் வள்ளுவர் ஒரு குறள்லே என்ன 
சொல்ல்லியிருக்கார்னாநீதி,நேர்மைஇல்லாமல் 
அடுத்தவன் சொத்துக்களை அபகரிப்பவன், அவன் குடும்பத்தோடு அழிஞ்சு போவான். அவனுக்கு கேடும் பலவகை நீங்கிடாத குற்றமும் வந்து சேரும் அப்படீன்னு. நம்ம பாலு சார் தினம் ஒரு திருக்குறள்பதிவிலே எழுதியிருக்காரு. இது எனக்கு என்னமோ சரியில்லைன்னு நினைக்கிறேன்.அடுத்தவன் சொத்துக்களை ஆட்டையப் போட்டவங்கதான் இப்ப ஆளும் பொறுப்புலே இருக்காங்க. இவங்க எங்க குடி முளுகிப்போயிட்டாங்க. எதுக்குமே ஆசைப்படாத நீதாண்டா தம்பி இப்ப எல்லாத்தையும் தொலைச்சுட்டு வந்து நிக்கிறேன்னு நான் நினைக்கிறேன். நீ என்ன சொல்றே ?

மன்னாரு :-  அண்ணே !! நீ யாரை மனசுலே வைச்சு இத்த சொல்றேன்னு எனக்கு தெரியுது. நம்ம நாட்டை பிடிச்ச 5 ஆண்டு சனியன்கள், அந்த ரெண்டு பொம்பளைகளை நினைச்சுத்தானே சொல்லுறே.

கண்ணா :- டேய்..தம்பி..கரெட்ரா தம்பி. அவளுக 
ஆட்டையப்போடாத சொத்தா. நல்லாத்தானே 
இருக்காளுக. அய்யன் சொன்ன மாதிரி ஒன்னும் 
கேடு வரலையே தம்பி. அதான் கேட்டேன்.

மன்னாரு :- அட..என்னாண்ணே..நீ புரியாமப் 
பேசிகிட்டு. அந்த ரெண்டு பொம்பளைகளுக்கும் 
முதல்ல கொள்ளிவைக்க புள்ளை,குட்டி, எதாச்சும் இருக்கா முதல்லே. அண்ணே !! அழியாத செல்வம் என்னைக்குமே குழந்தைகள்தான். ரெண்டாவது 
அவளுக ரெண்டு பேருக்கும் உடம்புலே எம்புட்டு
வியாதிகளை ஆண்டவன் தந்திருக்கான். நோயற்ற வாழ்வே குறைவில்லாத செல்வம் அண்ணே. எத்தன கோடிகள், கோடானு கோடிகள் இவங்க கொள்ளையடிச்சு சேத்து வச்சாலும், ஒரு பைசாவைக் கூட சாவுறப்போ கொண்டுப்போக முடியாதுன்னே.இந்தம்மாவோட தலைவர் ஒரு படத்துலே என்ன பாடியிருக்கார் தெரியுமா ?


பட்டணத்தில் பாதி இவர் வாங்கி முடித்தார்.

அந்த பட்டயத்தில் கண்டதுபோல் வேலி 

எடுத்தார்.

அங்கு எட்டடுக்கு மாளிகையை கட்டிவைத்து வந்து இந்த எட்டடியில் வந்து படுத்தார்....


அப்படீன்னுதானே. அதாலே இதெல்லாம் கொஞ்ச காலம் அனுபவிச்சுக்கலாம். அம்புட்டுத்தான். மத்தபடி நாறவாயன் சம்பாதித்ததை நாறவாயன் செலவளிப்பான். அடுத்த வருஷம் பிப்ரவரி மாச கடைசிலே இந்த அம்மா உள்ளே போவது உறுதி.பிறகு என்ன அண்ணே. 

நான் வரட்டா. நன்றி அண்ணே.

**********************************************************நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா. பாலு.  

No comments:

Post a Comment