அறிவற்றவர்கள் நிறைந்த சபையில் அறிஞர்கள் பேசினால், அது எதற்கு ஒப்பாகும் ? திருவள்ளுவர் கூறிய கருத்து !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- அவை அறிதல்.
குறள் எண் :- 720.
அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லாதார்முன் கோட்டி கொளல்... ... ...
பொருள் :- தம்மைப்போன்று அறிவுடையார் அற்ற சபையில், நல்ல கருத்துக்களைச் சொல்வது,தூய்மை இல்லாத இடத்தில், அமிழ்தத்தை ஊற்றியதைப் போன்றது. இது வான்புகழ்வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும்அதன் பொருளுமாகும்.
நாட்டு நடப்பு விளக்கம்:-
சங்கிமங்கி :- என்னடா மங்கி சங்கி இப்ப
நடந்துட்டு இருக்கிற சட்டமன்றக் கூட்டத்தில்
நம்ம தல தளபதி புள்ளி விவரங்களோட எப்டி
பேசி சும்மா கலக்குறாரு பாத்தியாடா ?
மங்கிசங்கி :- ஆமா ..நானும் பாத்தேன் அத்த.
ஏண்ணே நான் கேக்கேன், நம்ம தளபதி நல்ல
அரசியல்லே அனுபவசாலி. அதிலும் பழுத்த
அரசியல்வாதி. அவர் போயிட்டு இந்த ஒன்னும்
தெரியாத முட்டாப்பயலுவ நிறைஞ்ச அந்த
சபையிலே ஏன் பேசணும் ? இப்டி பேசினா
அது எதுக்கு ஒப்பாகும் அப்டின்னு நம்ம மதுரை
TR.பாலு அவுக எழுதியிருக்குற தினம் ஒரு
திருக்குறள் பகுதியிலே படிச்சேன் அதான்
நான் உங்கட்ட கேக்குதேன்.
சங்கிமங்கி :- தம்பி நீ சொல்லறது என்னவோ
சரிதான். ஆனா நம்மள தேர்ந்தெடுக்குற அந்த
பகுதி மக்களுக்காக, நாம எதுனாச்சும் பேசித்
தானேடா ஆவணும். அதுக்குத் தாண்டா நம்ம
தளபதி, ரொம்ப பொறுமையோட பேசுறார்.
என்ன புரிஞ்சுதா ? சரி தம்பி நான் கடைக்குப்
போவனும். வரட்டா ?
மங்கிசங்கி :- அண்ணே பாத்து சூதானமா நீங்க
போய்ட்டு வாங்கண்ணே. அப்பாலே நாம
சாயங்காலம் பூங்காலே சந்திச்சு பேசுவோம்.
**********************************************
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. TR.பாலு.
No comments:
Post a Comment