Tuesday, August 30, 2016

மனைவி இடும் கட்டளைகளுக்கு அடிபணிந்து நடக்கும் கணவனிடம் என்னென்ன இருக்காது ? திருவள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  பெண்வழிச் சேறல்.

குறள் எண் :-  909.






அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும் 

பெண்ஏவல் செய்வார்கண் இல்... ... ...


பொருள் :-  அறம் செய்தலும், மதிப்புடைய பொருளைத்தேடுதலும், பிற செயல்களில் ஈடுபடும் குணமும் மனைவி இடும் ஏவலைக் கேட்டு செயல்படுபவரிடம் இருக்காது. இது வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற 
திருக்குறளும் அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

குப்பு :- வாங்க தம்பி  அப்பு. என்ன முகம் கொஞ்சம் வாட்டமா இருக்கு ? இன்னாடா விசயம். அட..நான்..உன் அண்ணன் கேக்குறேன் இல்ல..சும்மா சொல்றா தம்பி.

அப்பு :- அண்ணே உங்கட்ட  சொல்றதுக்கு என்ன ?
என் வூட்டுக்காரி நேத்து ஒரு வேலை செய்யச் 
சொல்லிட்டு அப்பாலே  வேலைக்கு போய்ட்டா.

குப்பு :- சரி. செஞ்சு முடிச்சு தொலைக்க வேண்டியதுதானே ?அத்த விட உனக்கு என்ன பெரிய கலெட்டர்வேல பாக்கீகளோ ? உம்..சொல்லு..சொல்லு..

அப்பு :-  அட..மறதி அல்லாருக்கும் பொதுதானே.
மறந்துட்டேன். ஆபீஸ்லே இருந்து வந்து திட்டு 
திட்டுனா பாரு. வீடே ரெண்டாயுருச்சுஅண்ணே .
உம்.. அல்லாம் என் தல எழுத்து. அப்பாலே 
நானும் உங்கள  மாதிரி நாலு எழுத்து படிச்சு 
வேலைக்கு போயி நாலு காசு சம்பாரிக்கிற 
புருசனா இருந்திருந்தேன்னா இவட்ட இப்டி 
அல்லாம் திட்டு வாங்கனும்னு என்ன விதியா?
என்ன அண்ணே  நான் சொல்றது ?

குப்பு :-  சரி  வுடுறா தம்பி . இதுதான் உன்னோட 
வாழ்க்கைன்னு ஆயிப்போச்சு. அதுக்கு நீ 
தகுந்தாப்புலே நடந்துக்கிடுறா. ஆனா ஒன்னு.

அப்பு :- என்னண்ணே தப்பு தப்பா நீங்க சொல்லுதீக.ஆனா வந்து ரெண்டாவது தானே அ
தானேடா ஒன்னு.

குப்பு :- இந்த குசும்புக்கு ஒன்னும் குறைச்சல் 
இல்ல உன்ட்டே.  ஆனா நம்ம திருவள்ளுவர் 
இன்னா சொல்லிருக்கார்னா ?

அப்பு :- இன்னா அண்ணே  சொல்லிக்குராறு ?

குப்பு :- அப்பாலே நீ கோச்சுக்க படாது. இத்த நான் 
சொல்லலே. அப்பாலே வள்ளுவர்தான்டா அம்பி 
சொல்லிக்கிறாரு. அது இன்னான்னா வந்து 
வீட்டுக்காரி போடுற கட்டளைகளுக்கு அடிபணிஞ்சுநடக்குற ஆம்புளையாளுகளாலே எந்தவித நல்ல விசயமும் செய் முடியாது. அவங்க சம்பாரிக்க முடியாது. சுதந்திரமா எந்த வேலையுமே செய் முடியாது. அது உன் விசயத்துலே பாத்தா சரிதானே. அட..இன்ன..நான்..சொல்றது ?
ஐயோ...அடிக்க..வராதடா..தம்பி..நான் இப்ப..
கிளம்புறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment