அடங்காப்பிடாரித்தனத்தைப் பற்றி திருவள்ளுவர் சொல்லும் கருத்து என்ன ?
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- அடக்கம் உடைமை.
குறள் எண் :- 121.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்... ...
பொருள் :- அடக்கம் ஒருவரைக் கடவுளைப்
போல பெருமை அடையச் செய்திடும். ஆனால்
அடங்காமையோ, ஒருவனை/ஒருத்தியை
அறியாமை என்னும் இருளில் தள்ளி விடும். இது தெய்வப்புலவர் திருவள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
சந்திரா :- ஏண்டி இந்திரா, நேத்து சட்டமன்ற
நடவடிக்கையை தொலைக்காட்சியில்
செய்தி வாசிக்குறச்சே பாத்தியாடி.
இந்திரா :- ஆமா, அந்தக் கன்றாவிய என் ரெண்டு
கண்ணாலேயும் பாத்தேன்.
சந்திரா :- ஏண்டி அந்தப் பொம்பளே இம்புட்டு
திமிர்பிடிச்சதனமா யாரையுமே மதிக்காம
அடங்காப் பிடாரியா பேசுது ?
இந்திரா :- அக்கா, அந்த பொம்பள சினிமாலே
என்ன கதா பாத்திரம் போட்டுக்கிட்டு வந்துச்சோ
அதே மாதிரிதான் வாழ்கையிலேயும் இருந்துட்டு
வருது. புரட்டு நடிகரும் அத எம்புட்டோ திருத்த
பாத்து முடியாம போனதாலே தான் இந்தப்
பொம்பளே தலையிலே தண்ணிய தெளிச்சுட்டு
மஞ்சுளா,லதா, சந்திரகலா அப்டீன்னு போயிட்டார்.ஆனா இந்தப் பொம்பளே ராஜீவ் காந்திய "கையிலே"போட்டுக்கிட்டு என்னென்ன ஜில்லாலங்கடி வேல பாத்துச்சுன்னு என் வீட்டுக்காரர் அடிக்கடி என்கிட்டே சொல்வார்டி. இந்த பொம்பளே கூடிய சீக்கிரம் தன்னோட மதிப்பையும் மரியாதையும் இழந்து இருட்டு அறையில் ( காராக்கிரகம்- ஜெயில்) போய்
உக்காரும் நாள் வெகு தொலைவில் இல்ல அக்கா.இதே கருத்தைத்தான் நம்ம மதுரை TR பாலுசார் இன்று எழுதியுள்ள திருவள்ளுவரின் , தினம் ஒரு திருக்குறள் பகுதியில்போட்டுருக்கார் அக்கா படிங்க. நான் போயி காய் வாங்கிட்டு வரேன் என் நாத்தனார் நாகலட்சுமி இன்னைக்கு வந்து எங்க வூட்லே சாப்பிட வருதாம். போயிட்டு வாறன் அக்கா.
******************************************************
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
No comments:
Post a Comment