Sunday, August 21, 2016

அழிந்து போக நினைப்பவர்கள் அணிந்து கொள்ளும் அணிகலன்கள் யாவை ? திருவள்ளுவர் அருளியது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்   :-  மடியின்மை.

குறள் எண் :-  605.




நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் 
கெடுநீரார் காமக் கண்... ... ...

பொருள்  :-  தாமதமாக காரியங்கள் செய்தல்,
மறந்து போகுதல்,சோம்பல் கொள்ளுதல்,
உறங்குதல், இந்த நான்கு பழக்கங்களும்,
அழிந்து போகக்கூடியவர்கள் தாமே 
விரும்பி ஆசையோடு அணிந்துகொள்ளும் 
அணிகலன்கள் ஆகும்.  இது வள்ளுவர் 
நமக்கு அருளிச்சென்ற திருக்குறளும் 
அதன் பொருளும் ஆகும்.                                               


நன்றி !! வணக்கம் !!                                                             


அன்புடன். மதுரை. T.R. பாலு.

No comments:

Post a Comment