Tuesday, August 23, 2016
பெருமை என்றால் என்ன ? சிறுமை என்றால் என்ன ? திருவள்ளுவர் அருளிச்சென்றது !!
சுப்பையா :- வணக்கம் தம்பி கந்தையா.என்ன எப்படி சுகம் எல்லாம்.
கந்தையா :- அண்ணே !! உங்க அன்பும் ஆதரவும் இருக்குறவரை என் சுகத்துக்கு என்ன குறைச்சல். நல்லா இருக்கேன்.
சுப்ப:- ஆமா ஏண்டா தம்பி இந்த பொம்பளே நான் யாரைச் சொல்லுதேன்னு உனக்கு புரியுதா ?
கந்த:- என்னண்ணே !! இது புரியாமலா?
சுப்ப:- அது ஏண்டா தம்பி இம்புட்டு திமிர்,ஆணவம்,அடங்காமையோட அலையுது?
கந்த:- எல்லாம் பணத்திமிர்தான் வேற என்ன ? கேக்க ஆள் இல்லைங்கற மமதை.பெரும்பான்மை கையிலே இருக்கின்ற அகம்பாவம் இதாண்ணே காரணம்.
சுப்ப:- ஏண்டா தம்பி இதெல்லாம் நிலைக்குமா?
கந்த :- அண்ணே எல்லாம் கொஞ்சகாலம்தான்.ஆனானப்பட்ட இதுக்குமேலே திமிரோட திரிஞ்சவங்க அம்புட்டுப்பேரும் மண்ணோடு மண்ணாகிப் போனானுவ. இது மட்டும் என்ன சாஸ்வதமாவா இருக்கப்போகுது. எல்லாம் கொஞ்சகாலம்தான். தசா புத்தி நல்லா இருக்கும்வரை நடக்கும்.
சுப்ப :- அப்புறம் தம்பி ?
கந்த:- அப்புறம் என்ன ? கோவிந்தா கோவிந்தா !!எல்லோரும் போன இடத்துக்கு போக வேண்டியதுதான். கொஞ்சம் எனக்கு வேலை கிடக்கு. அண்ணே நாம சாயந்திரமா பாப்போம்.நான் போயிட்டு வாரேன் அண்ணே.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment