Thursday, August 25, 2016

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செல்வத்தை அழிக்கும் கருவி எது ? வள்ளுவர் தந்த விளக்கம் இது !!







தினம் ஒரு திருக்குறள்.

அதிகாரம்  :-   கொடுங்கோன்மை.

குறள் எண் :-  555.



அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 

செல்வத்தைத் தேய்க்கும் படை... ... ... 


பொருள் :-  நாட்டுமக்கள் துன்பம் தாளாமல் 
விடுகின்ற கண்ணீர்தான் ஆட்சி அதிகாரம் 
செய்பவர்களின் செல்வத்தை அழிக்கும்
போர்க்கருவி ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் பொருளும் ஆகும்.


நாட்டு நடப்பு விளக்கம் :-

இந்தத் திருக்குறளுக்கும் அதன் மேற்சொன்ன 
விளக்கத்திற்கும், தமிழ்நாட்டில் ஆளும் 
அதிகார வர்கத்திற்கு பொருத்தமாக வாசகர்கள் 
இணைவைத்துப் பார்த்தால், அதற்கு கட்டுரை 
ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பு அல்ல.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R. பாலு.


No comments:

Post a Comment