ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் செல்வத்தை அழிக்கும் கருவி எது ? வள்ளுவர் தந்த விளக்கம் இது !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- கொடுங்கோன்மை.
குறள் எண் :- 555.
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை... ... ...
பொருள் :- நாட்டுமக்கள் துன்பம் தாளாமல்
விடுகின்ற கண்ணீர்தான் ஆட்சி அதிகாரம்
செய்பவர்களின் செல்வத்தை அழிக்கும்
போர்க்கருவி ஆகும். இது வான்புகழ் வள்ளுவர் நமக்கு அருளிச்சென்ற குறளும் அதன் பொருளும் ஆகும்.
நாட்டு நடப்பு விளக்கம் :-
இந்தத் திருக்குறளுக்கும் அதன் மேற்சொன்ன
விளக்கத்திற்கும், தமிழ்நாட்டில் ஆளும்
அதிகார வர்கத்திற்கு பொருத்தமாக வாசகர்கள்
இணைவைத்துப் பார்த்தால், அதற்கு கட்டுரை
ஆசிரியர் எந்த விதத்திலும் பொறுப்பு அல்ல.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
No comments:
Post a Comment