Monday, October 13, 2014

பெண் என்பவள் மூன்று தன்மைகளையும் தன்னகத்தே கொண்டவள்தான் !! வள்ளுவரின் விளக்கம்!!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  தலையணங்கு உறுத்தல்.


குறள் எண் :-  1085.



கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் 


நோக்கம்இம் மூன்றும் உடைத்து... ... ... ... ... 



விளக்கம் :-  எமனோ ? கண்களோ ? 


பெண் மானோ ?இளமையான இவளது கண்கள் 


இம்மூன்று தன்மைகளையும் உடையதாக 


இருக்கிறதே !!


இது திருவள்ளுவர் தந்த விளக்கம்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


பிரகாஷ்:-    என்னடா நம்ம பிரபாகரனை பாத்து 


ஒரு வாரம் ஆயிருச்சே. எங்க போயி 


தொலைஞ்சான் ?ஏண்டா கதிரவா நீ பாத்தே 


அவனை.


கதிரவன் :-  ஏன் அண்ணே பிரகாஷ் அண்ணே 


உங்களுக்கு விஷயமே தெரியாதா . அவன் 


காதல் வசப்பட்டு பத்து நாளாச்சு. அவன் 


வீட்டுக்கு பக்கத்து வீட்டு அம்புஜம் மாமியோட 


பொண்ணு ஐஸ்வர்யாவை அவன் காதலிக்கிற 


விஷயமே உங்களுக்குத் தெரியாதா ? இல்ல 


தெரியாத மாதிரி எங்ககிட்டேயே 


நடிக்கிறீங்களா ? உம்...ஒன்னும் புரியலையே...


பிரகாஷ் :- டேய்...சத்தியமா தெரியாதுடா. 


ஏண்டா இவன் கடைசியிலே அய்யர்வீட்டுலேயே 


கை வச்சுட்டானா. படவா !!ஆனாலும்ஐஸ்வர்யா 


உண்மையிலேயே ரொம்பவும் பிரமாதமான 


அழகிதாண்டா. அவளோட கண்ணழகில் நான் 


என்னையே முன்பு  பறிகொடுத்தவன் 


தாண்டா. அவள் தெருவில் நடந்து வரச்சே 


உண்மையிலேயே சொல்றேன் ஒரு பெண் மான் 


நடந்துவரமாதிரி வருவாடா.உண்மையிலேயே 


அவஆண்இனத்தைகொள்ளவரும்எமன்தாண்டா.

அந்தப்பொண்ணும்இவனைக்காதலிக்கிறாளா?


இவன் பிற்படுத்தப்பட்ட இனமாச்சே.


கதிரவன் :- என்ன அண்ணே நீங்களே இப்படி 


பேசிக்கிட்டு.காதலுக்கு ஏதுண்ணே 


முற்படுத்தப்பட்டது, மற்றும் 


பிற்படுத்தப்படதுன்னு இருக்கா என்ன. இருவரும் 


காதல் வயப்பட்டுன்னு வேணா சொல்லுங்க. 


நாங்க ஒத்துக்கிறோம். அட என்னங்கடா 


நண்பர்களா நான் சொல்றது.


நண்பர்கள் கூட்டம் :-ஆமா..நீங்கசொன்னதுதான் 


சரி...அதோ பிரபாகரனே வாராண்டா. நாம 


அவன்கிட்டேயேகேட்போம். ஏண்டா தம்பி 


பிரபாகரா ? நீ அய்யர் ஆத்துப் பொண்ணு 


ஐஸ்வர்யாவை மனசாரக் காதலிக்கிறாயா?


பிரபாகரன் :- ஆமாடா உயிருக்கு உயிரா 


காதலிக்கிறேன்.அவ இல்லை நானும் இல்ல. 


அந்த அளவுக்கு நாங்க 


ரெண்டு பெரும் உண்மையா காதலிக்கிறோம். 


எங்க கல்யாணத்தை நீங்கதாண்டா நடத்தி 


வைக்கணும்.


பிரகாஷ் :- அதுக்கு என்னடா வர்ற ஐப்பசி மாசம் 


ஜாம் ஜாம்னு நடத்தி வச்சு உன்னையஜெயில்லே 


போடுறோம்.


பிரபா:- என்ன ஜெயில்லிலேயா ?


பிரகாஷ் :- ஆமாண்டா. இல்லறம் என்று 


சொல்வது ஒரு இன்பமான ஜெயில்தானே.


நண்பர்கள் :-" கொல் " என்று சிரிக்கின்றனர்.



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!


நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் 


நிறைவடைகிறது.



மீண்டும் நாளை சந்திப்போம்.



நன்றி !! வணக்கம் !!



அன்புடன். மதுரை T.R. பாலு.


No comments:

Post a Comment