Saturday, October 25, 2014

சிறையில்வைத்து பெண்ணை பூட்டிவிட்டால் அவள் காப்பாற்றப்பட்டு விடுவாளா ? வள்ளுவர் தரும் விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்  :-  வாழ்க்கைத் துணைநலம்.


குறள் எண்:-  57.




சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் 


நிறைகாக்குங் காப்பே தலை... ... ... ... ...



விளக்கம் :-  சிறைக்காவலில் வைத்துவிட்டால் 


அது மகளிரை என்ன செய்துவிட முடியும் ?


அவர்கள் கற்பினால்/ஆத்மா திருப்தியினால் 


தம்மைத் தாமே காத்துக்கொள்ளும் காவலே 


தலைசிறந்த காவலாகும்.  இது வாழ்புகழ்


வள்ளுவர் நமக்கு அருளிச் சென்ற குறளும்


அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-


காத்தவராயன் :-  ஏலே வானவராயா உனக்கு 


செய்தி தெரியுமா ?


வானவராயன் :-  என்ன அண்ணே சேதி.அட அத்த 


சொன்னாத்தானே  நமக்குத் தெரியும்.


காத்த:- நம்ம அக்ராஹாரத்து அம்பி அழுகுணி 

சுப்புணிப்பயலோட பொண்டாட்டி சுலோச்சனா 

இல்ல..சுலோச்சனா.. அவ அவங்கஆத்தைவிட்டு 


ஓடிப்போயிட்டாளாம். அந்தப்பயமைனர் 


மகாதேவன் பயலோட. தெருவே சிரிப்பா இல்ல 


சிரிச்சுக்கிடக்குது.


வானவ:- என்னாண்ணே அக்கிரமமான்னா 


இருக்கு.


காத்த:-  அட மடப்பய மவனே. நம்ம பய சுப்புணி


சரியில்லையில்லே. அதான் குட்டி மைனரோட 


ஓடிப்போய்ட்டா.


வானவ :-   ஏண்ணேநம்மசுப்புணிநல்லாத்தானே 


அண்ணே இருக்கான். கை,கால் சுகத்தோட. 


அப்புறம் எப்படி ?


காத்த :- அட முட்டாப்பய மவனே. உனக்குத் 


தெரியாதுடா. இந்தப்பய இராத்திரி இராத்திரி 


அந்தப்புள்ளையபட்டினி போட்டுட்டு, வீட்டையும் 


பூட்டுப் போட்டுட்டு கோவில்ல  போய் இல்ல, 


நல்லா குறைட்டைவிட்டு படுத்து தூங்கிடறான். 


அந்தப் புள்ளையும் பாவம் எத்தனை 


நாளைக்குத்தான் பசி,பட்டினியாக் கிடக்கும்.


அதான் ஓடிடுத்து.அட...என்ன...நான்...சொல்றது ?


வானவ:- என்ன அண்ணே கொடுமையா இருக்கு.

பொண்டாட்டிவவுத்துக்கு பட்டினிபோடுறபயலுவ


எல்லாரும் நரகத்துக்கும் கீழே ஒருநரகம்ஒன்னு 


இருக்குதாம்.அங்கேஇவனுகளைஎல்லாம் கொதி


-க்கிற எண்ணெய்ச் சட்டியிலே போட்டு நல்லா 


வறுத்தெடுப்பானாம் எமதர்மன்.


காத்த :-  அட..மூனுதலைமுறைக்கு முட்டாப்பய 


மவனே. வவுத்துக்கு பட்டினி போடலைடா. 


அவளோட வாழ்க்கைக்குன்னா பய பட்டினி 


போட்டுட்டன்.பாத்தா பத்தினி. எத்தினி 


நாளைக்குத்தான் பாவம் அவளும் 


பொறுப்பா.வயிறு பசிச்சா வடையும் சோறும்.


வாழ்க்கை பசிச்சா அது என்ன மண்ணையா 


துன்னும்.ஓடிப்போயட்டாட ஓடிப்போயட்டாடா 


அந்த மைனர் பயலோட.


வானவ:- அதாலேதானோ என்னவோ நம்ம 


வள்ளுவரு மேலே சொன்ன குறள்ள அந்தமாதிரி 


சொல்லி இருக்காரு.


காத்த:- என்னாலே சொல்லியிருக்காரு ?


வானவ :-  மேலே இருக்குல்லே, நீனே படிச்சுத் 


தெரிஞ்சுக்க அண்ணே. எனக்கு கொஞ்சம் 


வேலை இருக்கு. நான் போயிட்டு அப்பாலே 


வாறன்.                                                                                       


காத்த :-  சரிடா தம்பி.. நானும் குறளை படிச்சுட்டு 



போயிட்டு வாறன்.                                                                 


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


பெறுகின்றது.மீண்டும் அடுத்து சந்திப்போம்.   


நன்றி !! வணக்கம் !!


அன்புடன் திருமலை. இரா. பாலு.                                    


( மதுரை T.R. பாலு )

No comments:

Post a Comment