Tuesday, October 14, 2014

பெண்களின் மார்பினை மறைத்திடும் மேலாடைக்கு திருவள்ளுவர் தரும் உதாரணம் !!








தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  தலையணங்கு உறுத்தல்.



குறள்  :-  1087.



கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர் 


படாஅ முலைமேல் துகில்... ... ... ... ...



விளக்கம் :-  இந்தப் பெண்ணின் சாயாத 


முலைகளைப் போர்த்தி உள்ள மேலாடை 


கொள்ளும் யானையின் முகத்தினை மறைக்க 


போடப்பட்டுள்ள முகபடாம் போன்று உள்ளது.


இது வான்புகழ் திருவள்ளுவர் நமக்கு அருளிச் 


சென்ற குறளும் அதன் விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :- ( சொர்க்கத்தில் 


இந்த உரையாடல் நடைபெறுவதாக 


கற்பனையில் எழுதப்பட்டு உள்ளது)



சுவாமி பாகவதர் :-  என்ன மணி பாகவதரே ஒரே 


மயக்கத்தில் புலம்பியவண்ணம் நீர் இருந்து 


கொண்டு பக்கத்தில் படுத்திருந்த என்னை இரவு 


முழுவதும் தூங்கவிடாது சீண்டிக்கொண்டே 


இருந்தீர்களே !! என்ன விஷயம் என்று நான் 


அறிந்து கொள்ளலாமா ?


மணி பாகவதர் :- உம்...உம்மிடம் 


சொல்வதற்கென்ன ?நேற்று எனது கனவில் 


முன்னாள் நடிகை மார்பழகி T.R.  இராஜகுமாரி 


வந்து என்னைப் படாதபாடு படுத்தி விட்டாள். 


எனைஇறுகஅவளதுபெருத்த மார்பகங்களோடு 


சேர்த்து அணைத்து கட்டிக்கொண்டு எனது 


கன்னங்களில் முத்தம் இட்டு, அப்பப்ப்பா முடித்து 


விட்டு வெளியில் வருவதற்குள் எனக்கு 


போதும்போதும் என்றாகிவிட்டது.


சுவாமி :-   யோவ்...உண்மையிலேயே நீர் 


ரொம்பவும் கொடுத்து வைத்தவர்தான்போங்கள். 


எனக்கும்தான் கனவு வந்தது. கனவினில் 


வந்தவர் யார் என்று நீவிர் கேட்டால் ஆச்சரியப் 


பட்டுப் போவீர். ஆமா....



மணி :-  அப்படியாருங்கானும் உமது கனவினில் 


வந்து உம்மை உசுப்பேத்தினது.


சுவாமி :- எல்லாம் தெய்வப்பாடல்கள் பாடும் 


KB. சுந்தராம்பாள்தான். வந்து ஒரே பக்திமணம் 


கமழ்ந்திடும் பாடல்களைப் பாடிசொர்கலோகமே 


அல்லோல கல்லோலப் பட்டுவிட்டது போங்கள்.


மணி :- யோவ்... உம்ம தலையிலே இடி விழ.


நீர் என்ன பேச்சு பேசுகிறீர். நான் என்ன 


சொல்றேன். நீர் என்ன சொல்றீர். உமக்கே 


இது நியாயமாகுமோ ?


சுவாமி :- அதுசரி...உமக்கு இந்த விஷயம்


தெரியுமோ?


மணி :- பெண்கள் எதற்காக தங்களது மார்பினை 


மறைத்திடும் வண்ணம் மேலாடை 


போர்த்திக்கொண்டு நகரினில் வலம் 


வருகிறார்கள் ?


சுவாமி :-  அது தெரிந்தால் ஏங்காணும் 


என்னோட கனவில் KB சுந்தராம்பாள் 


வருகிறார்கள் ?உமக்குத் தெரிந்தால் நீர் 


சொல்லும்.பார்ப்போம்.


மணி :-  களிறு அதான் ஒய் யானை. அதுக்கு கண் 


பூதாகாரமான கண் அமைப்பு. சாதரணமான 


மனிசன் கூட அதோட கண்ணுக்குகுண்டோதரன் 


மாதிரி தெரிவதால்தான் அவனுக்கு கட்டுப்பட்டு 


யானைநடந்துக்கிறது.அதைஅந்தயானையை 


சாமி நகர்வலம் வரும்போது ஊர்வலத்தில் 


கூட்டி வரும்போது கூட்டமான மனுசங்களைப்


பார்த்து அது பயந்துபோய் மதம்பிடித்துவிடக் 


கூடாது என்றுதான் அதற்கு நெற்றியில் இருந்து 


தும்பிக்கை வரையில் தங்கமுலாம் பூசிய 


முகபடாம் போட்டு அழைத்து வருவது வழக்கம். 


அதேபோலத்தான் அழகிய சாயாத முலைகளை 


உடைய இந்தப்பெண்ணைப்பார்த்து 


பார்ப்பவர்கள் வெறி கொண்டுவிடக்கூடாது 


என்று நினைத்துத்தானோ இவள் தனது 


மார்பகங்களைமறைக்க இந்த மேலாடைதனை 


அணிந்து கொள்கிறாளோ 


என்று திருவள்ளுவர் ஒரு குறளில் 


குறிப்பிட்டிருப்பது உமக்குத் தெரியாதோ. 


தெரியலை என்றால் தெரிந்து கொள்ளும். 


நேக்கு நாழி ஆச்சு. நான் வரேன்.


அன்பர்களே !!


நமது நாட்டு நடப்பு விளக்கம் இத்துடன் நிறைவு 


அடைகிறது.


மீண்டும் நாளை சந்திப்போம். 



நன்றி !! வணக்கம் !!




அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment