அடக்கம் இல்லாமல் ஆடியவர்களது நிலைமை என்றைக்குமே இப்படித்தான் !! வள்ளுவர் காட்டிய வழி !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- அடக்கமுடைமை.
குறள் எண் :- 121.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்... ... ...
விளக்கம் :- அடக்கம் என்கின்ற ஒரு குணம்
மனிதனை கடவுள் இருக்கும் இடத்திற்கே
கொண்டுசென்று அவனை வைத்துவிடும்.
அடங்காமை (யாரையும், எவரையும் மதிக்காது
யதேச்சிகாரமாக வாழ்தல்) அவனை அறியாமை
என்னும் கொடுஞ்சிறையில் கொண்டுபோய்த்
தள்ளி விடும். (இந்த நீதி மன்றத்தில் ஜாமீன்
கீமீன் எதுவுமே கிடைக்காது)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். திருமலை. இரா. பாலு.
(மதுரை T.R. பாலு)
No comments:
Post a Comment