Thursday, October 16, 2014

மதிநுட்பம் நிறைந்தோர் மற்றும் ஆன்றோர்கள் எதை விரும்ப மாட்டார்கள் !! திருவள்ளுவர் தரும் விளக்கம் !!







தினம் ஒரு திருக்குறள்.



அதிகாரம்  :-  வரைவின் மகளிர்.



குறள் எண் :- 915.



பொதுநலத்தார் புன்னலம் தோயார் 

                                                                              மதிநலத்தின் 


மாண்ட அறிவி னவர்... ... ... ... ... ... ... ... 



விளக்கம் :-  மதிநுட்பம் கொண்டுள்ள சான்றோர், 


மற்றும் அறிஞர் பெருமக்கள், விலைமாதர்கள் 


தருகின்ற இழிவான இன்பத்தினை ஒருபோதும் 


விரும்பிடவே மாட்டார்கள்.  இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற குறளும் அதன் 


விளக்கமும்  ஆகும். 



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-  



வானவராயன் :-  என்னடா தம்பி வல்லவராயா 


எப்படிடா இருக்கே. சுகமா. கையிலே காசு 


எதுனாச்சும் வச்சுருக்கியா ?                                         


வல்லவராயன்:-  என்னது காசா ? அத நான் 


கண்ணாலே பாத்து பல மாசம் ஆச்சு அண்ணே !! 


வானவ:- என்னடா தம்பி படக்குன்னு இப்படி 


சொல்லிபுட்டே. தென்காசியிலே புதுசா 


கேரளாவிலே இருந்து ஐட்டாங்கள் பத்து 


பதினஞ்சுகளை நம்ம புரோக்கர் பொன்னுசாமி 


இறக்கி இருக்கானாம். நம்ம பாண்டிப்பய போய் 


பாத்துட்டு நல்ல அனுபவிச்சுட்டு வந்து 


சொன்னான். உடனே எனக்கு ஜிவ்வுன்னு 


உடம்புலே ரத்தம் சூடாயிருச்சுடா. அதான் 


உன்ட்ட காசு இருக்கான்னு கேட்டேன்.                     


வல்ல:-  விளைத்தாரனை எல்லாம்எவ்வளவாம் 


அண்ணே ?                                                                               


வான :- ஒரு புல்நைட்டுக்கு ரூபாய்ரெண்டாயிரம் 


தாண்டா.                                                     


வல்ல :- எவ்வளவு ?....எவ்வளவு ?.... 


ரெண்டாயிரமா ? ஆத்தாடி இத்த வச்சு இருபது 


நாளை குடும்பத்துக்கு செலவு செய்யலாமே ?     


வான :-  டேய். உன்கிட்ட நான் ஒன்னும் பட்ஜெட் 


கேக்கல. காசு இருக்கா இல்லையா ?                         


வல்ல :-  அண்ணே திருவள்ளுவர் என்ன 


சொல்லியிருக்கார் தெரியுமா. மதி நுட்பம் 


நிறைந்தவர்களும், அறிஞர் பெருமக்களும், 


பொருளுக்காக இன்பம் தரும் விலைமாதரின் 


இழிவான இன்பத்தை ஒருபோதும் விரும்பவே 


மாட்டார்களாம். அதனாலே நீ திருந்திரு 


அண்ணே.                                                                                 


வான :-  டேய் தம்பி எனக்கு இப்ப வயசு நாற்பத்தி 


ஐந்து. இன்னும் ஒரு 15 வருஷம் கழிச்சு எனக்கு 


சொல்லவேண்டியதை இப்ப சொன்னா எப்படிடா.


சரி நான் நம்ம சேட் செங்கல்வராயன்கிட்டே 


போயி நகையை அடகு வச்சு அனுபவிச்சுட்டு 


வாரேண்டா. நீ வீட்டுக்குப் போயி ஒழுங்கா 


சாப்பிட்டு தூங்கு. காலையிலேநாமசந்திப்போம். 


வல்ல :-  என்ன துவைச்சாலும் நீ வெளுக்கவே 


மாட்டியா அண்ணே. சரி விதி யாரை விட்டது. 


நாளைக்குப் பார்ப்போம்.  


நன்றி !! வணக்கம் !!  



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment