Sunday, October 19, 2014

காதலியின் வேதனைக் கூக்குரல் !! இரண்டையும் என்னால் எப்படி தாங்க முடியும் ? வள்ளுவர் தந்த விளக்கம் !!








தினம் ஒரு திருக்குறள்.


அதிகாரம்   :-   நெஞ்சோடு கிளத்தல்.


குறள் எண் :-   1247.



காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே 


யானோ பொறேன்இவ் விரண்டு... ... ... ...



விளக்கம் :-   என்னுடைய நெஞ்சமே !! ஒன்று, 


உனக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் காமத்தை 


விட்டு விடு. இல்லை என்றால், என்னுடன் 


பின்னிப்பிணைந்து கொண்டிருக்கும் நாணத்தை 


விட்டு விடு. இவ்விரண்டினையும் என்னால் 


தாங்கிக்கொள்ள இயலாது.  இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிச் சென்ற திருக்குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.



நமது நாட்டு நடப்பு விளக்கம் :-



திருநெல்வேலிக்குப்போகும் வழியில் உள்ள 


ஒரு நகரம்தான் கங்கைகொண்டான். (இதன் 


உண்மைப்பெயர் கண்கைகொண்டான்) 


அந்த ஊர் பண்ணையாரின் பெயர்தான் 


பண்டரிநாதன்.  அவரது ஒரே மகள் அவள் பெயர் 


பங்கஜவல்லி. பேரழகி.சமீபத்தில் திருமணம் 


செய்து கொண்ட அவள், கணவன் கந்தனுடன் 


ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக,சென்னை


நகரிலிருந்து சொந்த ஊருக்த் திரும்பி உள்ளாள்.


ஏன் கணவருடன் சண்டைபோட்டாய் ஊருக்கு 


வந்துள்ளாய் என அவளது தாயார் தங்கம்மா 


கேட்கிறாள். இனி வருவது நேரலையில் (LIVE):-



தங்கம்மா :-  என்னடி...உன் காது என்ன செவிடா ?


உம்...காலையிலே இருந்து நான் கேட்டுக்கிட்டே 


இருக்கேன். எதுக்குடி எதுமே பேசாம இருக்க ?



பங்கஜவல்லி :-  என்னைய என்ன செய்யச் 


சொல்றே. அவனுக்கு எதுக்குமே நேரம் காலம் 


தெரிய மாட்டேங்குது. காலையிலே 7 மணிக்கு 


குளிச்சுட்டு சாமி கும்பிடபப்போற நேரம்பாத்து 


என்னைய கட்டிப்புடிச்சு " அந்த விஷயத்துக்கு " 


வலுக்கட்டாயப் படுத்திக் கூப்பிடுறார்.

தங்க:-  கூப்பிட்டா போக வேண்டியதுதானேடி.


அத்தவிட ஒரு பொண்டாட்டிக்கு என்னடி 


வேணும்.


பங்கஜ:-  இல்லம்மா எனக்கு ஒரே வெட்கமா 


இருக்குது. ஆனா அவர் மீது ஆசையும் இருக்குது.


இந்த ரெண்டும் என்ட்ட இருக்கிறதாலே நான் 


ஒண்ணுமே செய்ய முடியலம்மா. ஒன்னு 


என்கிட்டே இந்த நாணம் இருக்கணும் 


இல்லைன்னு சொன்னா அந்த காமம் 


இருக்கணும். இந்த இரண்டையும் என்னாலே 


எப்படி அம்மா தாங்கிக்கொண்டு அவரோட வாழ 


முடியும் ?அதனாலேதான் நான் அவரை மட்டும் 


சென்னையிலே விட்டுபுட்டு சொந்த ஊர் 


வந்துட்டேன் அம்மா.


தங்க :-  அடியே பைத்தியாரி உன் வயசுலே 


நானும் உன்னைய மாதிரிதான். உன் அப்பா


என்கிட்டே ஆசைஆசையா வருவார். நான் 


வெட்கத்தினாலே அவர விட்டு விலகி விலகி 


போயிருவேன். அப்ப ஒருநாள் உன் பாட்டிதான் 


எனக்கு புத்திமதி சொல்லி உன் அப்பாவோட 


என்னைய செத்து வச்சாங்க. அதற்கு அப்புறம் 


பத்து மாசம் கழிச்சுத்தான் நீ பொறந்தே. 


என்கிட்டே இருந்த நாணத்தை நான் கைவிட்டு 


உங்க அப்பா கூட பஜனை பண்ணி வலியோடு நீ 


பொறந்ததாலேதான் உனக்கு பங்கஜவல்லி 


அப்படீன்னு பேரே வச்சோம். ( அப்போது வீட்டின் 


வாசல் முன்பாக ஒரு டாக்சி வந்து நிற்கிறது. 


அதிலிருந்து பங்கஜ வல்லியின் கணவன் கந்தன் 


பெட்டியோடு உள்ளே வருகிறார்)


தங்க:-  வாங்க..வாங்க..மாப்பிள்ளை.


கந்தன் :-  ஆமா அத்தை. உங்க பொண்ணு....


தங்க :-  மாப்பிள்ளை இனிமே நீங்க எதுக்கும் 


கவலைப்பட வேண்டாம். பொண்ணுகிட்டே 


நல்லா புத்தி சொல்லியிருக்கேன். இனிமே 


அவ முன்பு மாதிரி இருக்கவே மாட்டாள்.


நீங்க போயி குளிச்சிட்டு மாடிக்குப் போங்க 


மாப்பிள்ளை. அங்க உங்க வருகைக்காக 


பங்கஜவல்லி காத்துக்கிட்டு இருக்கா.


போங்க மாப்பிள்ளை.


கந்தன் :-  அத்தை நான் போயி பங்கஜத்தை 


பாத்துட்டு ஒரேயடியா அப்புறமே குளிக்கிறேனே.  

தங்க :- உங்க இஷ்டம் மாப்பிளை. நல்லா 


நீங்க அனுபவிங்க. நான் வாரேன்.


நன்றி !! வணக்கம் !!


இத்துடன் நமது நாட்டு நடப்பு விளக்கம் நிறைவு 


பெறுகிறது. மீண்டும் நாளை சிந்திப்போம்.


அன்புடன். திருமலை.இராம.பாலு.


(மதுரை T.R. பாலு) 


No comments:

Post a Comment