Friday, May 31, 2013
Tuesday, May 28, 2013
மழையே வா !! மனமே வா!! மழையே வா!! மாநிலங்காக்க வா !! மழையே வா !!மனம்போல் வா!!
உடல் மண்ணுக்கு !! உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழர்களுடன் உரையாடும்போது !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- வான் சிறப்பு.
குறள் எண்:- 15.
கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற்
-றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை... ... ... ... ... ... ... ... ...
விளக்கம் :- பெய்யாமல் உலகோர்
வாழ்வை கெடுக்கக் கூடியதும்மழை
இயற்கைவளம்கெட்டுநொந்துபோன
மக்களுக்குத்துணையாய் அவ்வாறே
காக்கக் கூடியதும் இவை எல்லாமே
மழையினால் மட்டுமே விளையும்
பலன்களாகும். இது வான் புகழ்
திருவள்ளுவர் நமக்கு அளித்திட்ட
குறளும் அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
அன்புத் தாய்மார்களே !!
அருமைப் பெரியோர்களே !!
என் இனிய குழந்தைகளே !!
உங்கள் அனைவருக்கும் என் இனிய
காலை வணக்கம்.
(டேய். மச்சி. என்னாடா இது
அதிசியமா கீது. இங்கே எங்கேடா
வந்து சேந்தாரு நம்ம ஐயா
பெருமதிப்புக்கு உரிய "தமிழன் "
திரு.சாலமன் பாப்பையா
அவர்கள்.எல்லாம் நம்ம மதுரை
T.R.பாலு ஐயாவோட திடீர்
நாடகம்தாண்டா மச்சி. சரி அத்த வுடு
இப்ப கதையைக் கேட்டுக்கினு வா)
பொதுவாக தமிழ்க் கிழவி என்ன
சொல்லிருக்கா என்றால், ஒருவர்
கேட்கிறார் கேள்வி அவ்வையிடம்
என்ன கேள்வி என்றால் இந்த
நாட்டை ஆளும் அரசனின் மதிப்பு,
புகழ்,செல்வாக்கு,நாட்டு மக்களின்
செல்வச்செழுமைஇவைஅனைத்து
விஷயங்களும் எப்போது முழுமை
நிறைந்த உயர்வினைப் பெரும் என
ஒரே ஒரு கேள்வி கேட்டார்.அதற்கு
தமிழ்க்கிழவிஒரேஒர்வார்த்தையில்
பதிலும் உரைத்தாள்.அது என்ன
பதில் என்று கேட்டால் அந்த பதில்
தான் இந்த பதில் :-
"வரப்புயர "
என்ன ஐயா ஒரே புதிரா இருக்கு
ஒன்னும் விளங்கலையே!! என
நீங்கள் தவிப்பது எனக்கு புரிகிறது.
அந்தக் கிழவிதான் எவ்வளவு நுட்பம்
நிறைந்த மதி கொண்டவள். அவள்
சொன்ன அந்த ஒரு வார்த்தைக்குள்
எத்தனை அர்த்தங்கள்,ஆழமான
சிந்தனை,அப்பப்பா நினைத்தாலே
எனது உள்ளமெல்லாம் குளிர்கிறது
அடுத்த பிறவி ஒன்று உண்டு என்று
சொன்னால் எனைப் படைத்த என்
ஆண்டவனே!! மீண்டும் பிறந்தால்
இந்தத் தமிழ்நாட்டில் ஒரு பச்சைத்
தமிழனாகப் பிறக்க ஆணையிட
வேண்டும் அதுதான் நான் உன்னிடம்
வேண்டுவது. கிழவி சொன்ன அந்த
வார்த்தைக்குள் பொதிந்துள்ள
பொருள் தனைப் பாருங்கள் கீழே
குறிப்பிட்டுள்ள பாடல் மூலமாக:-
வரப்புயர நீர் உயரும் !!
நீர் உயர நெல் உயரும் !!
நெல் உயர குடி உயரும் !!
குடி உயரக் கோன் உயர்வான் !!
பாடலின் பொருள் :- நெல் விளையும்
பூமியை பகுதி பகுதியாகப் பிரிப்பது
வரப்பு ஆகும். அந்த வரப்பை உழவன்
உயரமாக கட்டினால் அதில் நீரும்
நிறைவாக சேரும். அப்படி நீர்
நிறைவாக சேர்ந்தால் விளைச்சல்
நிறைவாக இருக்கும். அப்படி மகசூல்
என்னும் விளைச்சல் உயர்வாக
இருந்தால் அதை விளைத்திட்ட
உழவர் பெருமக்களும் செல்வத்தில்
உயர்ந்த நிலையில் இருப்பார்கள்.
அவ்வாறே குடிமக்கள் யாவரும்
செல்வச் செழுமையில் உயர்ந்த
நிலைதனில் இருப்பார்களேயானால்
அந்த நாட்டினை கட்டி ஆளும்
தலைவனும் உயர்ந்த நிலைதனில்
இருப்பான் என்று தமிழ்க் கிழவி
எவ்வளவு நாசூக்காக ஒரே
வார்த்தையில் பதில் கூறியுள்ளதை
நினைத்திடும்போது நம் தமிழ் இனம்
எவ்வளவு நுண்ணறிவு பெற்றது
என்ற கருத்தினையும் என்னால்
எண்ணாமல் இருக்க இயலவில்லை
என் அன்புத்தமிழ் நெஞ்சங்களே.
கடந்த 5 ஆண்டுகளாக அதாவது 2௦௦6
ஆண்டு முதல் 2௦11 முடிய இந்தத்
தமிழ் நாட்டில் வான் மழைபொய்க்க
வில்லை.காரணம் என்ன ? சற்றே
சிந்தித்துப்பாருங்கள். காரணம்
அப்போது இந்தத் தாய்த் தமிழ்
நாட்டினை ஆண்ட தலைவன் திரு
முத்துவேலர் கருணாநிதி அவர்கள்
அவரது தூய உள்ளம், உண்மையான
மக்கள் தொண்டு செய்திடும் பண்பு,
எதிர் கட்சியை எதிரிக் கட்சியாக
பாவித்திடத் தெரியாத தன்மை,
வஞ்சிக்க தெரியாத கருணை மனம்,
இவை எல்லாம் ஒன்று சேர்ந்து
நமக்கு எந்தவிதமான மழைக்கான
பஞ்சத்தையும் அளித்திட வில்லை.
அதுதான் உண்மை. ஆனால் இன்று
இங்கே என்ன நடைபெறுகிறது.
புதிய ஆட்சி பொறுப்பேற்றது முதல்
மக்கள் பணி எங்கே நடைபெற்றுக்
கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்
தாலும் ஒரே பழிவாங்கும் படலம்
இப்படிப்பட்ட மனம் கொண்ட ஒரு
தலைமையிடம் இந்தத் தமிழ்நாடு
சிக்கிக் கொண்டால் வருண பகவான்
எப்படி ஐயா மழை தந்து மக்களை
மகிழ்விப்பான். சிந்தித்து பாருங்கள்
அன்பர்களே. தலைமையை தேர்வு
செய்வதில் நாட்டு மக்கள் தவறு
இழைத்துவிட்டார்கள். உப்பு
தின்றால் தண்ணீர் குடித்துத் தானே
ஆக வேண்டும் அதுபோல் தப்பு
செய்தால் தண்டனை அனுபவித்துத்
தானே ஆக வேண்டும். அதைத்தான்
மக்கள் இன்று இங்கே அனுபவித்துக்
கொண்டு இருக்கிறார்கள் என்று
மக்களாகிய நீங்கள் கூறுகிற
கருத்தினை என்னால் முற்றிலும்
புறந்தள்ள இயலவில்லை
அன்பர்களே. கவியரசரின் பாடல்
வரிகள்தான் என் நினைவின்பால்
இப்போது வருகிறது அன்பர்களே!!
" சிந்தித்துப் பார்த்து "
செய்கையை மாத்து
சிறுசா இருக்கையில்
திருத்திக்கோ-- தவறு சிறுசா
இருக்கையில் திருத்திக்கோ
தெரிஞ்சும் தெரியாமல்
நடந்திருந்தா அது
"" திரும்பவும் வராம பாத்துக்கோ ""
என்ற கவியரசரின் பாடலில் உள்ள
"உள்கருத்தை" பொதுமக்களாகிய
நீங்கள் அனைவரும் மனதின் உள்
வாங்கி "எதிர்வரும் காலங்களில்"
நடப்பீர்களே ஆனால் நம் தமிழ்
நாட்டில்என்றுமேவான் பொய்க்காது
என்று கூறி இதுவரை இந்த குறள்
விளக்கத்தினை இவ்வளவு
பொறுமையோடு படித்து,இரசித்த
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு
நன்றி பாராட்டி விடைபெறுகிறேன்.
நன்றி!! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R.பாலு.
Monday, May 27, 2013
அடுத்தவர் மனைவி மீது மோகம் கொள்ளாதே !!
உடல் மண்ணுக்கு !! உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
(ஆங்கிலமொழிகலப்புஏதுமின்றி)
தமிழர்களுடன்உரையாடும்போது!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் : பிறனில் விழையாமை.
குறள் எண்:- 146.
"பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாம் இல்லிறப்பான் கண்"... ... ... ... ... ...
விளக்கம் :- பகை, பாவம், அச்சம்,பழி,
என்று சொல்லப்படுகிற இவ்வகை
நான்கு விதமான குற்றங்களும்
அடுத்தவரது மனைவியின் மீது
நெறிமுறை தவறி நடப்பவரிடம்
இருந்து நீங்கவே நீங்காது. இது
வான்புகழ் வள்ளுவன் நமக்கு
அளித்திட்ட குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :-
பொதுவாக மனிதனின்மனம் எப்படிப்
பட்ட தன்மைகளோடு உண்மையான
எண்ணங்களோடு அமையபெற்றது
என்றால்தன்னிடம்உள்ள பொருளின்
மதிப்பு அறியாமல் மடத்தனமாக
பிறர் வசம் உள்ள பொருள்(பெண்)
மேல்எவ்வளவுஅழகாகஇருக்கிறாள்
என்றே அவன் அரைவேக்காட்டு
அறிவோடு வாழ்ந்தே வசப்பட்டவன்
இது அவன் மீது உள்ள குற்றம் அல்ல
அவனது பூட்டன்,பாட்டன்,அப்பன்
ஆகியோரது எண்ணங்களும்
அத்தகை வடிவம் பெற்றதால் வந்த
விளைவு இது. இதைத்தான் கவிஞர்
சொன்னார் "இக்கரைக்கு அக்கறை
பச்சை "என்றும் "எத்தனை கிண்ண--
த்தில் இட்டாலும் மது அத்தனையும்
சுவை ஒன்றாகும்.சித்திரக்கிண்ணம்
அதில் பேதம் இல்லை-உன் சிந்தை
யிலேதான் பேதமடா " என்று கமல்
நடித்த "மன்மத லீலை "படத்தில்
வரும் பாடல் மூலம் நமக்கு அறிவு
உரைத்தவரே கவியரசர் அவர்கள்.
சிந்தனையை மாற்றிக்கொள்ள
மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக
பழகிக்கொள்ளவேண்டும். ஒரே நாள்
ஒரே இரவு இதில் நிச்சயம் நாம்
நம்மை மாற்றிக்கொள்ள இயலவே
இயலாது. சிறிது சிறிதாக மாற்றம்
செய்திட முயற்சி செய்து அதன் பின்
முயற்சியில்வெற்றிபெறுபவனே
ஆறறிவு படைத்த மனிதன்.
ஏனையோர் எல்லாம் 5 அறிவு
படைத்திட்ட ஜென்மங்களே.
முயன்றால்முடியாததுஎன்பது
இவ்வுலகினில் எதுவும் இல்லை
அன்பர்களே. புரிந்துகொண்டு அது
போல நடந்தால் பேரின்பம் உண்டு.
"முயன்று பாப்போம்"--அதில் "முழு
வெற்றியும் காண்போம் "
மீண்டும்
நாளை சந்திப்போமா
நேயர்களே !!.
"ROME CITY WAS NOT BUILT IN A DAY"
நன்றி !வணக்கம் !!
அன்புடன்,மதுரை T.R.பாலு.
நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனித ஜாதி!!
உடல் மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
(ஆங்கிலமொழிகலப்புஏதுமின்றி )
தமிழர்களோடு
உரையாடும்போதாவது.
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- நிலையாமை.
குறள் எண்:- 336.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்து இவ்வுலகு
விளக்கம் :- நேற்றுஉயிருடன் இருந்த
ஒருவன் இன்று இல்லாமல் இறந்து
போனான் என்று சொல்லப்படும்
நிலையாமை ஆகிய பெருமைதனை
உடையது இந்த உலகமாம். இது
வான் புகழ் வள்ளுவப் பெருமான்
நமக்கு அளித்திட்ட குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம்:-
எல்லா அய்யாமார்களுக்கும் ஆத்தா
மார்களுக்கும் இந்த பூலோக சஞ்சீவி
சாமியோட ஆசீர்வாதம். சுகந்தானா
எல்லோரும்?என்ன சுகம் வேண்டி
கிடக்கு இந்த கட்டைக்கு. கடலிடை
துரும்பம்மா மனித வாழ்வு என்று
எந்தக்காலத்தும் நினைவில் நிக்கிற
மாதிரி ஒரு வசனத்தை தமிழ் இனத்
தலை திருக்குவளைமுத்து வேலர்
கருணாநிதி என்னும் தமிழ்த்தாய்
பெற்றுஎடுத்த தவப்புதல்வன் அவர்
கதை,வசனம் எழுதிய "மனோகரா"
என்ற காலத்தினால் அழிந்திடாத
ஒரு காவியப் புகழ் திரைப்படத்தில்
வசனம் வரும். அந்த மாதிரி பாருங்க
திரையுலகில் பின்னணி பாடகரில்
அரசனாக விளங்கிய எங்க ஊர்
மதுரை பெற்று எடுத்த மாணிக்கம்
T.M.சவுந்திரராஜன் பாருங்க இப்ப
உயிரோட இல்லை. இதைத்தான் நம்
முன்னோர்கள் சொன்னார்கள் என்ன
சொன்னார்கள்:- இப்ப அதை உங்க
எல்லார்க்கும் இந்த பூலோக சஞ்சீவி
சாமிஇப்பசொல்லுது. தூங்கும்போது
வாங்குகிற மூச்சு அது துளி மாறிப்
போனாலும் போச்சு என்று. அதாலே
இந்த சாமி உங்க எல்லோருக்கும்
என்னா சொல்லுதுன்னா யாருக்கும்
எதுவும் நிரந்தரம் இல்லை. ஆச்சா.
சும்மா தேவை இல்லாமல்
அல்லாத்தையும் விரட்டுறது,அதிகா-
-ரம் கைமேலே இருக்கின்ற தைரியத்
துலே சும்மா அல்லாரட்டேயும்
அறட்றது உருட்றது இதெல்லாம்
நம்ம கைமேலே வேணாம். நானும்
சாகத்தான் போறேன்.நீயும்
சாகத்தான் போறே. என்னா யார் எப்ப
சாவோன்னு நாம யாருக்கும்
தெரியாது.அப்புறம் நமக்குள் என்ன
வீராப்பு. இன்னைக்கு உன்ட்ட
அதிகாரம் இருக்கு நீ விரட்ற.உக்கும்
நாளை வேற ஒருதர்ட்டே மாறிப்
போச்சுன்னு வச்சுக்க அந்த ஆளு
உன்னை விரட்டினா நீ தாங்குவியா
சொல்லு !! கண்ணு!!சொல்லு!!
அதாலே இந்த பூலோக சஞ்சீவி சாமி
கடைசியாஇன்னா சொல்துன்னா
பொறுமை!பொறுமையா இருந்து
பழகு ! உனக்கு மேல ஆட்டம்
போட்டவன் எல்லாம் செத்து மண்
துன்ருச்சு. தெரிசுட்டு ஒழுங்கா
அமுக்கிட்டு வாழ பழகு. யாரையும்
துன்புறுத்தாதே.துயரப்படுத்தாதே.
நீயும் வாழு.எல்லாரையும் வாழ
விடு. அப்பாலே நீயும் நல்ல இருப்ப
நாங்களும் நல்லா இருப்போம்.
என்ன ஒழுங்கா சொன்னதை கேட்டு
நடப்பியா. வரட்டா.இப்படிக்கு
பூலோக சஞ்சீவி சாமிகள்.
நன்றி.வணக்கம்.
Sunday, May 26, 2013
கெட்ட சகவாசம் உள்ளவர்களது குணம் எது ?
உடல் மண்ணுக்கு! உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
(ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி)
தமிழர்களோடு உரையாடிடும்போது
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- சிற்றினம் சேராமை.
குறள் எண் :- 451.
" சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும் "
விளக்கம் :- இயல்பான குணத்தால்,
பாரம்பரிய வளர்ப்பால், வளர்ந்த
பெரியோர்களின் உண்மையான
குணம் யாதெனின் தமக்கு சமமான
அறிவு,ஆற்றல்,செயல் இவை
எதுவும் இல்லாத சிறுமைத்தனம்
ஒன்றே தனது வாழ்நாள் இலட்சியம்
என நினைத்து வாழ்ந்து வரும்
இந்த சிற்றினம் என்று சொல்லப்
படும் சல்லித்தனமானபுத்திக்கு
சொந்தக்காரர்களை கண்டாலே
அஞ்சி அவர்களை தம்மிடம் சேர
விடாமல் ஒதுங்கிப்போகும் குணம்
உடையவர்களே பெரியோர்கள்.
ஆனால் இதற்கு எதிர்மறையான
குணம் கொண்ட சிறியோர்களின்
இயல்பான குணம் என்னவென்றால்
அந்த சல்லிபுத்திக்காரர்களை
கண்டவுடன் அவர்களையே
தங்களது சுற்றமாக எண்ணி அந்த
சின்னபுத்திக்காரர்களை இவர்கள்
தங்களின் சுற்றத்தார்கள்/சொந்தக்-
காரர்கள் என எண்ணி அவர்களை
தமது இனமாகவேகருதிஅவர்களை
தழுவிக்கொள்வார்கள்.
இது திருவள்ளுவர் நமக்கு அருளிய
திருக்குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
நன்றி!! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
Wednesday, May 22, 2013
காலம் வரும் ! காத்திருங்கள் !! தலைவரைப் போல !!!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
(ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி)
தமிழர்களுடன் உரையாடும்போது!!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- காலம் அறிதல்.
குறள் எண் :- 490.
"கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து ".. .. .. .. .. ... .. .. ... .. .. .. ..
விளக்கம் :- பொறுத்துக்கொண்டு
இருக்க வேண்டிய காலம் வரை
எப்படி கொக்கு (பெரிய கொழுத்த
மீனுக்காக) காத்துக் கொண்டு
இருக்கிறதோஅதுபோலஅமைதி
காத்துஇருக்க வேண்டும். காலம்
வாய்த்திடும்போது கொக்கு எப்படி
(மீனை குத்தி) குறிதவறாமல்செய்து
முடிக்கிறதோ அதுபோல நாமும்
நமது எண்ணத்தை செயல் படுத்த
வேண்டும்.இது திருவள்ளுவர்
நமக்கு அருளிய திருக்குறளும்
அதன் விளக்கமும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம்:-
(இந்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள
விஷயங்கள், சம்பவங்கள்,
கருத்துக்கள், இவை அனைத்தும்
முழுக்க முழுக்க கற்பனையின்
அடிப்படையில் புனையப்பட்டதே
அன்றி வேறு எந்த தனிப்பட்ட
நபரையோ அல்லது அமைப்பையோ
குறித்து எழுதப்பட்டது அல்ல.இது
செய்தி ஆசிரியர் தரும் உண்மை
நிறைந்த வாக்குமூலம்.)
அது ஒரு தொன்மையான தூய
மொழி பேசிடும் (ஒருதீபகற்ப
நாட்டின்) தென்கடைக்கோடியில்
அமைந்திட்ட ஒரு மாநிலம். அங்கு
இரண்டு ஆண்டுகட்கு முன் நடந்த
பொதுமக்கள் வாக்கு தேர்வினில்
அதுவரை கடந்த 5 ஆண்டுகளாக நல்
ஆட்சி நடத்திக்கொண்டிருந்த தலை
திரு மு.அன்புநிதி அவர்கள் வெற்றி
வாய்ப்பினை மட்டும் இழந்துவிட
வில்லை.அதோடு கூட எதிர்க்கட்சி
என்ற பெருமையையும் ஒருசேர
இழந்து விட்ட காரணத்தால் இன்று
தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
இருந்தாலும் அவரது இயக்கத்தின்
முன்னோடிகள் மீது ஏகப்பட்ட பொய்
வழக்குகள் போட்டு இந்த மாபெரும்
இயக்கத்தை வேரோடும் வேரடி
மண்ணோடும் அழித்து ஒழிப்பதே
தனது வாழ்நாள் இலட்சியமாகக்
கொண்டு செயல்பட்டுவருபவர்தான்
தற்போது விதிவசத்தால் ஆட்சியைக்
கைப்பற்றிய முன்னாள் எதிர்க்கட்சி
தலைவர் திருவாளர் ஜெயந்தன்
அவர்கள். தலை திரு மு. அன்பு நிதி
அவர்கள் எத்தனை எத்தனையோ
சோதனைகள்,வேதனைகள்,
மொழிப் போர், சிறைவாழ்வு, என
தலைதிருமு.அன்புநிதி அவர்கள்
பலப்பல போராட்டங்களை அவர்
தமதுவாழ்நாளில்சந்தித்துஅவற்றில்
வெற்றியும் பெற்று இருக்கிறார்.
அதுபோலவே தற்போது நாட்டினில்
நடைபெற்றுவரும் இந்த அதிகார
துஷ்பிரயோக காலங்களையும்
அவர் கடந்து மேற்சொன்ன குறளில்
வருவது போல தலை மு.அன்புநிதி
அவர்களுக்கும் ஒரு காலம் வரும்.
அப்போது கொக்குபோல அவரும்
தமது தூய்மை இலட்சியத்தினை
நிறைவேற்றிடுவார் என்பதில் அவர்
சார்ந்திருக்கும் கட்சியின் உண்மைத்
தொண்டர்களுக்கு எந்தவித ஐயப்-
பாடும் இல்லை. இது நமது நாட்டு
நடப்பு விளக்கம். மீண்டும் நாளை
சந்திப்போமா. நன்றி !!வணக்கம்!!.
அன்புடன் மதுரை T.R. பாலு.
Subscribe to:
Posts (Atom)