தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
(ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி)
(தமிழர்களிடம்)
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- ஊடலுவகை.
குறள் எண் :- 1327.
"ஊடலில் தோற்றவர்வென்றார்அது
மன்னும்
கூடலில் காணப்படும்". .. .. .. ..
விளக்கம்:-கணவன்மனைவிஇருவர்
இடையில் ஏற்படும் சிறு சிறு கருத்து வேறுபாடுகளில் (இதுவே ஊடல்என்பது)எவர்தமதுதோல்வியைஅப்போதைக்கு ஒப்புக்கொள்- கிறார்களோ அவரே வெற்றி பெற்றவர் ஆவார்.
இந்த உண்மை ஊடல் முடிந்த பின் இருவரும் கூடிமகிழும்நிலைதனில் உணரப்படும். இது திருவள்ளுவர் நமக்கு அளித்த குறளும் அதன் நல் விளக்கமும் ஆகும். நமது நாட்டு நடப்பு விளக்கம்:- கந்தன் :- எங்கேயாவது நீங்கள் இதுவரை கேள்விப்பட்டு இருக்கி றீர்களா? இல்லை யாராச்சும் சொல்லித்தான் இருக்காங்களா? கடம்பன் :-என்னாத்தை?கந்தன்:-அட !! அதாங்க நம்ம வான் புகழ் வள்ளுவர் மேலேசொன்ன குறளில் சொன்னதுபோல தோத்தவங்களை ஜெயித்தவங்க என்று. அட ஆமாங்க!கணவன் மனைவி இவங்க இருவருக்குள் வரும்விவாதங்களில் சச்சரவுகளில் (இதற்கு பெயர் “ஊடல்”) கணவன் மனைவியுடனோ அல்லது மனைவி கணவனிடமோ மோதவிரும்பாமல் சரி சரிநீ//நீங்க சொல்ற மாதிரியே நான் நடந்துக்கிறேன் என தோல்வியை ஒத்துக்கொள்கிறார்கள் என வைத்துகொள்வோம்.அவன்//அவள் ஜெயித்துவிடுகிறான்// ஜெயித்து விடுகிறாள். அட ஆமாங்க அதன் பிறகு இரவில் இருவருக்கும் இடையில் ஏற்படும் கூடலில் உறவின் பிணைப்பில் கணவன்//அல்லது மனைவி முதலில் இன்பத்தை அடைகிறார்கள் அல்லவா? ஆகவே யார் தனது தோல்வியை ஒப்புக் கொள்கிறார் --களோ அவர்களே இரவில் வெற்றி பெறுகிறார்கள்(பகலில் தோல்வியைஒப்புகொண்டாலும்கூட) என்பதனை
வள்ளுவப்பெருந்தகை எவ்வளவு நேர்த்தியாக, நாசூக்காக, நமக்குச் சொல்லி உள்ளார்என்பதனை படித்துப் பார்த்து இரசியுங்கள் எனது அன்பு நேயர்களே !! நன்றி!! வணக்கம் !! அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment