90 வயதிலும் தமிழுக்கு உழைத்திடும் ஐயா!! உமது பண்பும் புகழும் வாழிய வாழியவே !!
உடல்மண்ணுக்கு!!உயிர் தமிழுக்கு !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- பண்புடைமை.
குறள் எண்:- 994.
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு... ... ... ... ... ... ... ...
விளக்கம்:_ நீதியையும் நன்மை-
யையும் தனது மனத்தால் தான்
விரும்பி ஏற்றுக்கொண்டு, அதை
பிறர்க்குப் பயன்பட வாழ்ந்திடும்
பெரியோரின் நல்ல பண்பை உலகத்
தார் போற்றிக் கொண்டாடுவார். இது
திருவள்ளுவர் நமக்கு அளித்த
திருக்குறளும் அதன் விளக்கமும்
ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம்:- நம்
தமிழ் இனத் தலைவர் திருக்குவளை
முத்துவேலர் கருணாநிதி அவர்கள்
தமது முழு ஆயுள் காலத்தையும்
தமிழுக்கு,அதன் செழுமைக்கு,
முன்னேற்றத்திற்கு, வளர்ச்சிக்கு,
அர்ப்பணித்து வாழ்ந்து வரும் நல்ல
பண்பாளர் அவர். திருக்குறளுக்கு
குறள் ஓவியம் தீட்டி மகிழ்ந்த நல்ல
உள்ளம் அவரது.புகழ் என்னும் தமிழ்
வார்த்தையேஅவரால் புகழ் பெற்றது
பண்பு எனும் வாசகமே அவரால்
தமிழுக்கு பயன் அளித்தது இப்படி
நாம் பேசுவதால்எழுதுவதால்
அன்னார் வாழ்ந்த வாழ்க்கைக்கு
பெருமை. இதை உணர்ந்தவர்கள்
மட்டுமேகூறிடமுடியும்.உணராதோர்
மட்டுமே அவரை எதிரியாகவே
பார்த்திடுவார்கள்.கலைஞர்
அவர்களின் ஜனன கால ஜாதகக்
கட்டத்தைப் பார்த்தவன் நான்.
அதைப்படித்தவன் நான். அந்த
கட்டங்களை வைத்து அவரது எதிர்
காலங்களை கணித்தவன் நான்.
அந்த அடிப்படையில் என் அன்புத்
தமிழ் நெஞ்சங்களுக்கு ஒன்றை
மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்.
அவரை அழிக்க வேண்டும் ஒழிக்க
வேண்டும் என யார் நினைத்தாலும்
எவர் ஆசைப்பட்டாலும் நினைப்ப
வர்களும் ஆசைப்படுபவர்களும்
தான் அழிந்து ஒழிந்து இருக்கின்ற
னரே தவிர கலைஞருக்கு எந்தவித
பாதிப்பும் வராது. அவர் பிறந்துள்ள
லக்னம் அப்படிப்பட்டது.
அப்படிப்பட்ட நல்ல மனிதரை,
பண்பாளரை,தூய்மை நிறைந்த
உள்ளத்துக்கு சொந்தக்காரரை
மேலே சொன்ன திருக்குறளில்
அய்யன் திருவள்ளுவன் சொன்னது
போல இந்த உலகம் அவரை
வாழ்த்தி வணங்குவதில் வியப்பு
என்ன இருக்கிறது என்று சொல்லி
செந்தமிழ் நாட்டின் எதிர்கால
முதல்வர் அவர்களது பொற்கமல
பாதங்களை வணங்கி எனது இந்த
குறள் விளக்கம் பகுதியை நான்
நிறைவு செய்து விடை பெறுகிறேன்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே.
நன்றி!!வணக்கம்!!அன்புடன் மதுரை
T.R.பாலு.
No comments:
Post a Comment