Wednesday, June 12, 2013

கனியும் இங்கே இருக்கு !! காயை நாடுவது எதுக்கு ?




உடல் மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!  


தினம் ஒரு திருக்குறள்.                                   


அதிகாரம் :-  இனியவை கூறல்.             


குறள் எண்:- 1௦௦.


இனிய உளவாக இன்னாத கூறல்         

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று... ...      


விளக்கம் :- இனிமைநிறைந்த 


சொற்கள் இருக்கும்போது அவற்றை 


விட்டு விட்டு கடுமையான சொற்கள் 


கூறுவது கனிகள் இருக்கும்போது 


அதனை விடுத்து காய்களை பறித்து 


உண்ணுவது போன்றதாகும். இது 


திருவள்ளுவர் நமக்கு அருளிய 


குறளும் அதன் விளக்கமும் ஆகும்.


நமது நாட்டு நடப்பு விளக்கம்:-


என் உயிரினும் மேலான உலகம் 


முழுவதும் வாழ்ந்துவரும் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!முதலில் 


உங்கள் அனைவருக்கும் என் உளம் 


கனிந்த நல்வாழ்த்துக்களுடன்கூடிய 


வணக்கத்தினைஉங்கள் அனைவரது 


பொற்கமல பாதங்களில் வைத்து 


பணிந்துபின்எனது "குறள்விளக்கம்" 


பகுதியினை நான் எழுதிடத்துவங்கு- 


கிறேன் அன்புத்தமிழ்நெஞ்சங்களே!! 


தினம் தினம் எனது அனைத்து 


கட்டுரைகளிலும் தலைப்பு பகுதியை 


சற்றே உற்று கவனித்தீர்கள் என்று 


சொன்னால் உங்களுக்கு புரியும் 


அதில் நான் முதலில் எழுதுவது :-   


தமிழனாக வாழ்ந்திடுக !!          பிறகு:-


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!  


தமிழ் சகோதர சகோதரிகள் நடுவில் 


உரையாடிடும்போது !!                                 


என்று எழுதுவது எனது வாடிக்கை 


மட்டுமே அல்ல எனது கடைமையாக  


கருதி  செயல் படுபவன் நான் ஏன் 


என்றால் அந்த அளவிற்கு நான் 


தமிழை உயிருக்கும் மேலாக 


நேசிப்பவன் தூய்மைமிக்க தமிழ் 


காற்றினை மட்டுமே சுவாசிப்பவன். 


அதனால்தான் நான் தமிழ் இனத் 


தலைவன் திருக்குவளை முத்து 


வேலர் கருணாநிதி அவர்களின் 


தமிழ், அந்தத் தேனினும் இனித்திடும்  


அவர்தரும் தெள்ளு தமிழ் சுவைக்கு 


நான் ஒரு அடிமையாக ஆகியிருக்க 


முடியுமா என்அன்புத்தமிழ் நெஞ்சங்- 


-களே !!  நீங்களே சொல்லுங்கள்!!       


ஆக, எந்த தமிழ் மட்டுமே இந்தத் 


தரணி எங்கும் ஒலித்திடவேண்டும் 


அந்ததூயநல்லசொல்ஓசை மட்டும் 


இந்த தமிழ்நாட்டினில் நாம் கேட்டிட  


வேண்டும் என்ற நம் அனைத்துத் 


தமிழர்களது எண்ணத்தில் மண் 


அள்ளிபோடும் விதமாக நாம் 


தேர்ந்து எடுத்துள்ள மாண்புமிகு 


தமிழக முதல்வர் பேசுகின்ற விதம் 


நான் உண்மையில சொல்லுகிறேன். 


என் போன்ற, நம் போன்ற தமிழ் 


கற்றவர்கள் அனைவரது கண்களில் 


உதிரம் வடிவதுபோலத்தான் 


அன்னார்ஆங்கிலமொழிதனில்உரை


நிகழ்த்துவதையே தன் வழக்கமான  


பணிகளில்ஒன்றாகநடத்திக்கொண்-


-டு வருவது வெறுப்பாக மட்டும் 


அல்ல மிகவும் அருவருப்பாகவும் 


கூட அமைந்து இருக்கிறது என்று 


சொன்னால் அது மிகையான சொல் 


அல்ல என் அன்புத் தமிழ் நெஞ்சங் 


களே.  நான் மதிப்பிற்குரிய முதல்வர் 


அவர்களைப் பார்த்து கேட்கிறேன். 


நீங்கள் ஆட்சி புரிவது ஏதோ இங்கி-    


லாந்து நாட்டில்உள்ள ஓர் மாகாணம்  


அல்ல முதல்வர் அவர்களே! நீங்கள் 


கூட ஒரு தமிழ்நாட்டை வந்து 


சேர்ந்தவர்கள்தான்.உங்களுக்கு 


வாக்கு அளித்து ஆட்சிக் கட்டிலில் 


உங்களை அழகு பார்த்ததும் தமிழ் 


இன மக்கள்தான் இதைமறந்து 


விட்டு ஏதோ ஆங்கில மொழி தான் 


இந்த நாட்டின் தாய்மொழி போல பல 


இடங்களில் பேசுவது,பல நிருபர் 


களது பேட்டியில் பதில் உரைப்பதும் 


ஆங்கிலத்தினில் மட்டுமே என்று 


உள்ள பழக்கத்தை கொஞ்சம் 


கொஞ்சமாக மாற்றிக் கொள்ள 


பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் 


ஆங்கில பள்ளியில் படித்து அதில் 


பட்ட மேல்படிப்பு பெற்ற ஆங்கில 


முனைவராகக் கூட இருந்து விட்டுப் 


போங்கள். அதைப் பற்றி தமிழ் 


மக்களாகிய எங்களுக்கு எந்த 


வருத்தமும் கிடையாது. நேற்றைய 


தினம் கூட நீங்கள் கலந்து கொண்ட 


ஒரு போது நிகழ்ச்சி அடையாறு 


புற்று நோய் மருத்துவமனை 


விரிவாக்கப்பணிகளுக்கு 5 கோடிகள்  


வழங்கிய நிகழ்சிகளின் தொகுப்பை 


உங்கள் ஜெயா தொலைக்காட்சியில் 


கண்டு மனம் மிகவும் நொந்து போன 


தமிழர்களுள் நானும் ஒருவன். அந்த 


விழாவில் கலந்து கொண்டவர்கள் 


அனைவருமே தமிழர்கள்தான். 


மேடை மீது அமர்ந்து இருந்தவர் 


களும் கூட தமிழர்கள் மட்டுமே. 


பிறகு எதற்காக அந்த ஆங்கில 


உரை? ஏதோ ஒன்று இரண்டு 


ஆங்கில நாட்டைச் சேர்ந்தவர்கள் 


அந்த கூட்டத்தில் இருந்திருக்கலாம் 


அந்த மைனாரிட்டிகளுக்காக நீங்கள் 


ஏன் தாய் மொழிதனை புறக்கணிக்க 


வேண்டும்.ஏன்என்றால்மைனாரிட்டி 


என்ற சொல் உங்களுக்கு என்றுமே 


பிடிக்காத சொல். ஆகவே திருந்திட 


முயலுங்கள் என்று உங்கள் மேல் 


மதிப்பு உள்ள தமிழனாக நான் 


வேண்டி கேட்டுகொள்கிறேன். ஏதோ 


மலிவுவிலை உணவகங்கள் திறந்து 


விட்டோம் விலை இல்லா மிக்சி 


கிரைண்டர் மின்விசிறி இவைகள் 


தந்து விட்டோம் இந்த அறிவு 


இல்லாத சிந்திக்கும் திறன் இல்லாத 


பொது ஜனம் என்றுமே உங்களுக்கு 


வாக்கு அளித்துக் கொண்டு இருப்பா-


ர்கள் என்று எண்ணிடக் கூடாது. 


ஆனானப் பட்ட கர்ம வீரர் காமராஜர் 


அவர்களையே, பலபல அணைகளை 


கட்டிய, பலபல மின் திட்டங்களை 


இந்த நாட்டுக்கு அர்ப்பணித்த, 


மாணவர்களுக்கு முதன்முதலாக 


இலவச மதிய உணவுத் திட்டத்தை 


கொண்டுவந்த, பல பல கனரக 


தொழில்பேட்டைகளை இங்கே 


சென்னையில் ஆவடி மற்றும் 


தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 


அமைத்து தமிழ்நாட்டையே 


தொழில் வளம் மிகுந்த மாநிலம் 


ஆக ஆக்கிய, உண்மைக் கட்டை 


பிரம்மச்சாரியை பொதுப்பணத்தில்    


1௦ நயா பைசாவுக்கு கூட ஆசைப் 


படாத அந்த மாமனிதரையே (அவர் 


அங்கே சென்னை திருமலைப் 


பிள்ளை ரோட்டில் உள்ள அவரது 


வீட்டில் இறந்து கிடக்கிறார். அவர் 


சேர்த்து வைத்த சொத்து என்ன 


தெரியுமா அன்பர்களே. 


தலையணைக்கு அடியில் இருந்த 155 


ரூபாய் பணமும் கொஞ்சம் 


சில்லறைக் காசுகளும் பீரோவில் 


இருந்த 2 செட் கதர் வேட்டியும் 


சட்டையும் மட்டுமே.அவர் அகில 


இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் 


பதவி வகித்தவர்,தமிழ் நாட்டின் 


முதலமைச்சர் பதவி வகித்தவர்,பல 


பிரதமர்களை தனது  சொந்த 


யோசனைப் படியே தேர்ந்து எடுத்து 


இந்தநாட்டினை ஆளச் செய்தவர் 


கிங் மேக்கர் என்று அவரை 


சொல்வார்கள் )அவரது சொந்த 


விருதுநகர் தொகுதியில் தோற்க 


வைத்து இரசித்த  ஜனங்கள் 


நிறைந்த தமிழகம் இது என்பதை 


நீங்கள் மறந்து விடாதீர்கள்.இது 


எனது அன்பு வேண்டுகோள். 


ஒருவேளை இந்த கட்டுரையை நான் 


வெளியிட்டதற்காக என்மீது நீங்கள் 


காவல்துறைமூலமாககடுமையான 


நடவடிக்கைகூட எடுக்கலாம். 


அதைப்பற்றி எல்லாம் நான் 


கிஞ்சித்தும் கவலைப் படும் கோழை 


இனத்தைச் சேர்ந்தவன் அல்ல. வீரம் 


மட்டுமே தனது  உதிரத்தில் சேர்த்து 


வைத்து வளர்ச்சிகண்டதிராவிட 


இனத்தைச் சார்ந்தவன் . சொல்வதை  


சொல்லிவிட்டேன். செய்யுறதை 


செஞ்சுக்குங்க. நல்லதுன்னா 


கேட்டுக்குங்க கெட்டதுன்னா விட்டு 


விடுங்கள். மற்றவை அவரவர் தலை  


எழுத்துப் படியே நடக்கும். நன்றி 


வணக்கம்.அன்புடன்மதுரை T.R.பாலு

No comments:

Post a Comment