உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடிடும் பொழுது !!
முன்னுரை :- உலகெங்கிலும்
அன்போடும் தூய தமிழ் பண்போடும்
வாழ்ந்து வரும் என் உயிரினும்
மேலாக நான் போற்றி
வணங்கிவரும் நல்ல தமிழ் உடன்
பிறப்புகளே !!
அனைவருக்கும் என் இதயம் கனிந்த
நல் வாழ்த்துக்கள்.!! என்னுடைய
எழுத்துக்களைக்கூட படித்து
பார்த்திட இந்த உலகில், ஐக்கிய
அமெரிக்க குடியரசு, ரஷ்யா,
போலந்து,கத்தார்,பிரிட்டிஷ்கூட்டரசு
ஜெர்மன்,கனடா,நெதர்லாந்து,ஆகிய
நாடுகளில் பார்வையாளர்கள்
இருப்பார்கள், நான் எழுதுவதை
அவர்கள் பார்ப்பார்கள், படிப்பார்கள்
என்று, (சத்தியமாக நான்
சொல்கிறேன் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!!)நான் கனவில் கூட
நினைத்துப் பார்த்திடவில்லை.
இதுபோல உலகில் உள்ள நாடுகளில்
எனக்கு நல்ல பார்வையாளர்களைப்
பெற்றுத் தந்த அந்த எல்லாம் வல்ல
இறைவனுக்கு நான்என்றும் அடிமை
அந்த நல்உள்ளங்களுக்கு நான் என்
நெஞ்சார்ந்த நன்றிகளை அவர்களது
தூய மலர் பாதங்களில் வைத்து
வணங்குகிறேன். நன்றி!! நன்றி !!
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- செய்ந்நன்றி அறிதல்.
குறள் எண் :- 104.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணை * யாக்
கொள்வர் பயன் தெரிவார்... ... ... ... ... ... ... ... ... ... ... ...
விளக்கம் :-
ஒருவன் தினையளவாகிய
உதவியைச் செய்த போதிலும் அதன்
பயனைஆராய்கின்றவர், அதனையே
பனையளவாகக் கொண்டு (பனை
மரம் அளவு உயரமாக)போற்றுவர்.
இது வான் புகழ் திருவள்ளுவர்
நமக்கு அருளிய திருக்குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம்:-
இந்த குறள் விளக்கம் பக்கத்தில்
முன்னுரையாக நான் எழுதி உள்ள
விஷயங்களையே நமது நாட்டு
நடப்பு விளக்கமாக ஏற்றுக் கொள்ள
வேண்டுமாய் பணிவன்புடன்
கேட்டுகொண்டுவிடை பெறுகிறேன்.
நன்றி!! வணக்கம்!! மீண்டும் நாளை
சந்திப்போமா. அன்புடன் மதுரை T.R.
பாலு.
No comments:
Post a Comment