Thursday, June 20, 2013

குழந்தைச் செல்வத்தின் சிறப்பு !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 




தினம் ஒரு திருக்குறள்.                                     



அதிகாரம்   :-   மக்கட்பேறு.                       


குறள் எண் :-   66.                                             



குழல்இனிதுயாழ்இனிது என்பதம்மக்கள் 


மழலைச்சொல் கேளாதவர்... ... ... ... ... 



விளக்கம் :-  தனது மக்களின்/தனது 


குழந்தைகளின் மழலைச் சொல் 


பேசுவதைக் கேட்டு அதன் இனிமை  


தனை உணராதவர்கள் மட்டுமே 


குழலின் இசை இனிமை யானது, 


யாழின் இசை இனிமையானது 


என்று கூறுவார். இது திருவள்ளுவர் 


நமக்கு அருளிய குறளும் அதன் 


விளக்கமும் ஆகும்.                                               


இன்று வேலை மிக மிக அதிகம். 


எனவே நமது நாட்டு நடப்பு விளக்கம்  


இன்று இடம்பெறவில்லை என்று 


தெரிவித்துக் கொள்கிறேன். 


அதற்காக உங்களிடம் அருள்கூர்ந்து 


மன்னிப்பும் கோருகிறேன். நன்றி 


வணக்கம்.                                                                 


அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment