Tuesday, June 25, 2013

நல்ல காலத்திற்கு காத்திருங்கள்!!






உடல்மண்ணுக்கு!! உயிர் தமிழுக்கு!! 


தினம் ஒரு திருக்குறள்.                                           


அதிகாரம்  :-  காலம் அறிதல்.                              


குறள் எண்:-  485.                                             



காலம் கருதி இருப்பர் கலங்காது         


ஞாலம் கருது பவர்... ... ... ... ... ... ...                    



விளக்கம் :-  அகில உலகத்தை தனது 


ஆளுகையின் கீழ் கொண்டுவர 


வேண்டும் என கருதுகின்றவர்,            


வேறு எதைப்பற்றியும் எண்ணிக்      


கலங்காமல்அதற்குஏற்ற காலத்தை 


கருதிக் கொண்டு பொறுத்து  அமைதி 


காத்து இருப்பார். இது வான்புகழ் 


திருவள்ளுவர் நமக்கு அருளிய 


திருக்குறளும் அதன் விளக்கமும் 


ஆகும்.மீண்டும்நாளை சந்திப்போமா 



நமது நாட்டு நடப்பு விளக்கம்:-        


உலகெங்கிலும் பண்புடனும் 


அன்புடனும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலான உடன் 


பிறப்புக்களே! அனைவருக்கும் 


எனது இனிய நண்பகல் வணக்கம்.   


(பகல் மணி 12.௦5) இன்றைய தினம் 


நான் மேலே குறிப்பிட்ட குறளுக்கு 


பொருளாக,விளக்கமாக,இலக்கண


மாக,இலட்சியமாக, வாழ்ந்து வரும் 


தன்னிகரில்லாத ஒரே தலைவர் 


உலகத் தமிழ் இனத்தின் 


பாதுகாவலர், தமிழ்நாட்டின் மூத்த 


மற்றும் முதுபெரும் தலைவர்,தமிழ் 


இனத்திற்கு,தமிழ் நாட்டிற்கு,தமிழ் 


மொழிக்கு ஏதேனும் ஆபத்து வருகிற 


போதெல்லாம் தமது இயக்கத்தின் 


முன்னணித் தலைவர்கள், தொண்டு 


உளம் படைத்தோர்கள்,ஆக இந்த 


அத்துனைபேர்களையும் தமக்கு 


பின்னால் நிறுத்தி தான் மட்டுமே 


இந்த தள்ளாத 9௦ வயது காலத்தேயும்  


தலைமை ஏற்று செயல் 


படுத்துவதில் கலைஞருக்கு நிகர் 


கலைஞர் மட்டுமே.  ஆட்சி மாற்றம் 


காரணமாக இன்று அவரையும் 


அவரது கழகத்தினரையும் எந்தெந்த 


வகையில் பொய்வழக்குகள் 


போட்டாலும் காராக்கிரகத்தில் 


உள்ளே தள்ளினாலும் இங்கேயும் 


அங்கேயும் இழுத்தடிக்கப்பட்டு இதய 


நோய் வாய்பட்டவர் சேலம் 


வீரபாண்டி ஆறுமுகம் என்பதனை 


அறிந்தே அந்த சேலம் மண் பெற்று 


எடுத்த வீரமகன் கழக முன்னோடி 


அவரை வலுக்கட்டாயமாக 


எமனிடம் இந்த அரசு ஒப்படைத்து  


அகம் மகிழ்ந்தாலும் அவை 


அனைத்தையும் தனது இதயம் எனும் 


இரும்பு பெட்டகத்தில் வைத்து நல்ல 


காலத்திற்காக காத்திருக்கும் 


கலைஞர் அவர்களுக்காகவே 


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு 


முன்பாகவே அறிந்து,தெரிந்து, 


புரிந்து  திருவள்ளுவர் குறள் எழுதி 


இருக்கிறாரோ எனக்கு தெரியாது 


அன்பர்களே !! அதனை எண்ணி 


அதனால் எனது மெய் சிலிர்கிறது. 


கண்களில் கண்ணீர் பெருகுகிறது. 


இதயம் கனக்கிறது.நல்ல காலம் 


வந்து கலைஞர் அவர்கள் மீண்டும் 


ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இனி 


எதிர்காலத்தில் இது போன்ற 


நிகழ்வுகள் நிகழா வண்ணம் 


மக்களை பாதுகாத்து வழி நடத்தி 


செல்லும் ஆற்றலும் வல்லமையும் 


ஒருங்கே அமையப் பெற்ற என் 


தானை தலைவர் கலைஞர் 


அவர்கள் இருக்கின்றவரை நாம் 


எதற்கும்கலங்கப்போவதும் 


இல்லைகண்ணீர் விடப் போவதும் 


இல்லை.காலம் வரும்வரை கட்டுப் 


பட்டு இருப்போம்.பொறுமை 


காப்போம்.பிறகு வரலாறு 


படைப்போம் என்று சொல்லி 


பேரறிஞர் அண்ணா புகழ் வாழ்க!! 


கலைஞர் வாழ்க என்று சொல்லி 


இத்துடன் குறள் விளக்கத்தினை 


நிறைவு செய்து விடை பெறுகிறேன். 


நன்றி! வணக்கம் !!                                       


அன்புடன்.மதுரை T.R. பாலு.











No comments:

Post a Comment