உடல் மண்ணுக்கு !! உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !!
தமிழர்களோடுஉரையாடும்போது !!
தினம் ஒரு திருக்குறள் .
அதிகாரம் :- சான்றாண்மை.
குறள் எண்:- 985.
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது
சான்றோர்
மாற்றோரை மாற்றும் படை... ... ... ... ...
விளக்கம் :-இந்தபுவியில் உலகினில்
இன்றளவும் வாழ்ந்துவரும் ஆற்றல்
உடையவர்களது ஆற்றல்
என்னவெனில் பணிவுடன் நடத்தல்
என்பதேஆகும்.இந்தப்பணிவுஒன்றே
போதும் அது கற்றறிந்த சான்றோர்
தமது பகைவரை அவர்தம் பகைமை
உணர்விலிருந்து மாற்றுகின்ற
அதனின்று காப்பாற்றுகின்ற
கருவியாகும். இது வள்ளுவர்
நமக்கு தந்த குறளும் அதன்
விளக்கமும் ஆகும்.
நமது நாட்டு நடப்பு விளக்கம் :- நம்
தமிழ்இனத்தலைவர் தமிழ்அன்னை
பெற்றெடுத்த தவப் புதல்வர்களுள்
மூத்தவர், தமிழகத்தின் முதுபெரும்
அரசியல் சிற்பி, நாளை (௦3-௦6-2௦13)
திங்கள்கிழமை அன்று தனது 9௦ வது
பிறந்த தேதியைக் கொண்டாடிடும்
எங்கள் திராவிட இனமானக் காவல்
தெய்வம்முத்தமிழ்அறிஞர்,தூய நல்
அறிஞருள் அறிஞர் போற்றிடும்
மேதை மதிப்பு மிகு தலைவர் திருக்கு
-வளை முத்துவேலர் கருணாநிதி
அவர்கள் மேற்சொன்ன குறளுக்கு
இன்றைய தினம் ஒரு சிறப்பான
முன் உதாரணமாக திகழ்கிறார்
எனில் அதுவே உண்மை. அரசியல்
வானில் எத்தனை எத்தனையோ
மின்மினி நட்சத்திரங்கள் உலா
வந்தாலும் முழு வெண்ணிலவுக்கு
அவைகள் எப்படி இனையாகாதோ
அது போல தலைவர் தலைவர்தான்.
மற்றதுகள் மற்றதுதான். அவர்புகழ்
பாடி வாழ்வதே எங்கள் காலத்திற்கு
பெருமை. நன்றி.வணக்கம்.
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment