Saturday, March 2, 2013

திருக்குறள் விளக்கம் !!

திருக்குறள்  !!


உலகெங்கிலும் வாழ்ந்து வரும் எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களுக்கு உங்கள்  அனைவரின் பொற்கமல 
பாதங்களில் என்னுடைய  நெஞ்சார்ந்த நன்றி தனை காணிக்கையாக வைத்து வணகுகின்றேன் !!

தெய்வப் புலவர் திருவள்ளுவரின் அறிய படைப்பு நம் திருக்குறள் ஆகும். அதனின்று இன்று உங்களில் 
அனைவருக்கும் ஒரு குறளும் விளக்கமும் தந்து நான் மகிழ்ச்சி அடைந்திட விழைகிறேன்.நன்றி.

                  அதிகாரம்:-  பொறையுடைமை 

                   குறள் எண்:- 151

           அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை 
             இகழ்வார் பொறுத்தல் தலை.. .. .. .. ..  

எவ்வாறு தம்மை குழிதோண்டி வெட்டுவோரையும் 
தாங்கிடும் நிலத்தை போலநம்மை இகழ்ந்திடுவோர் 
நம்மை கேலி செய்வோர் அனைவரையும் நாம் 
பொறுத்துக்கொண்டு இருப்பதே நமது தலையாய 
நற்பண்பு என வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளதை 
நாமும் நமது வாழ்கையில்கடைபிடிப் போமா அன்பு நெஞ்சங்களே!!மீண்டும் அடுத்த குறள் விளக்கம் 
நிகழ்ச்சியில் நாம் அனைவரும் சந்தித்து இன்புறுவோம்  நண்பர்களே!! நன்றி!வணக்கம்!!

அன்புடன் மதுரை T.R.பாலு.



1 comment: